T3-TRAIN THE TRAINER, TRAINING AND RECRUITMENT: *அஷ்டாங்க யோகம்*

Monday, March 13, 2023

*அஷ்டாங்க யோகம்*

 🧘‍♀️🧘‍♂️🧘‍♀️🧘‍♂️🧘‍♀️🧘‍♂️🧘‍♀️🧘♂️🧘‍♀️🧘‍♂️🧘‍♀️

*அஷ்டாங்க யோகம்*    

           *ஒவ்வொரு மனிதனும் வாழ்வில் உடல் ஆரோக்கியமாகவும் உள்ள அமைதியாகவும் வாழவும், தன்னை உணரவும், தனக்குள் இறுக்கும் பேராற்றலை உணரவும் ஒரே வழி ஸ்ரீ பதஞ்சலி மகரிஷி அருளிய அஷ்டாங்க யோகம் என்ற 8 படிகளே வாழ்வின் வெற்றிப்படி என எளிமையாக விளக்கியுள்ளார்.*

*1. இயமம்*

    *மனம் சம்பந்தப்பட்ட ஒழுக்க நியதிகள். முக்கியமான கட்டுப்பாடுகள் அஹிம்சை, சத்தியம், பிரம்மச்சரியம், அஸ்தேயம், பேராசையின்மை போன்ற அடிப்படை மனித பண்புகளை வளர்க்க வேண்டும்.*

*2. நியமம்*

    *இதுவும் மனம் சார்ந்த ஒழுக்க கோட்பாடுகள் – அகத்தூய்மை, புறத்தூய்மை, தவம், புனித நூல்கள் படித்தல், இறைவனிடம் சரணாகதி முதலியவற்றை விளக்குகிறது.*

*3. ஆசனம்*

    *ஆசனம் என்ற சொல்லுக்கு 'இருக்கை' என்பது பொருள். உடலை ஒரு நிலையில் குறிப்பிட்ட அளவு நேரம் இருக்கச் செய்யும் உடற்பயிற்சியையும் அவை சார்ந்த நிலைகளையும் குறிக்கும் சொல்லே யோகாசனம்*


*4. பிராணாயாமம்*

    *பிராணயாமம் (சமசுகிருதம்: प्राणायाम prāṇāyāma ) என்பது ஒரு சமசுகிருத சொல், அதற்கு "பிராணா அல்லது மூச்சைக் கட்டுப்படுத்தி வைத்தல்" என்று பொருள்*


*5. பிரத்தியாகாரம்*

   *பிரத்தியாகாரம் என்பது அனைத்து புலன்களையும் கட்டுப்படுத்துவது ஆகும். மொத்தம் 11 புலன்கள் உள்ளன. அதாவது ஐந்து உணர்வுகள், ஐந்து செயல் புலன்கள் மற்றும் ஒரு மனம். பிரதி மற்றும் அகாரா, அதுவே பிரத்தியாகாரம் எனப்படுகிறது*


*6. தாரணை*

    *மனதை ஒரு பொருளில் குவிய செய்தல். அதன் மூலம் எண்ணற்ற ஆற்றலை அடையலாம். தாரணை கை கூட வைராக்கியம், சாத்வீக உணவு, தனித்திருத்தல் முதலியவை தேவை.*

*7. தியானம்*

    *ஒரே சிந்தனை. தாரனையின் முடிவு தியானமாகும். மன அமைதி. இதயம் பாதுகாக்கப்படும். எந்த நோயும் வராது. தியானம் கைகூடினால் எல்லாம் கைகூடும்.*

*8. சமாதி*

    *ஆதியில் சமம். எண்ணமற்ற நிலை. மனம் கரைந்த நிலை. மௌன நிலை. பேரின்ப நிலை. இதுவே நம் உண்மை இயல்பு.*

*அஷ்டாங்க யோக எட்டு படிகளை அனைவரும் கடை பிடிக்கலாம். ஆனந்த வாழ்வு வாழலாம்.*
🧘‍♀️🧘‍♂️🧘‍♀️🧘‍♂️🧘‍♀️🧘‍♂️🧘‍♀️🧘🧘‍♀️🧘‍♂️🧘‍♀️

No comments:

Post a Comment