T3-TRAIN THE TRAINER, TRAINING AND RECRUITMENT: "கடவுள் ஏன் அவர் இருப்பதை வெளிப்படுத்துவதில்லை

Friday, April 10, 2026

"கடவுள் ஏன் அவர் இருப்பதை வெளிப்படுத்துவதில்லை

 _*"கடவுள் ஏன் அவர் இருப்பதை வெளிப்படுத்துவதில்லை"*_

_*சீடன் கேட்டான்.*_

_*குரு ஒரு கதை சொன்னார்:*_

_"கடவுள் இருக்கிறார் என்று நம்பிய_

_ஒரு மனிதன் மெல்ல சொன்னான்,_ _'கடவுளே! என்னோடு பேசுங்களேன்!"_

_*அப்போது குயில் ஒன்று பாடியது.*_

_அதைக் காதில் வாங்காத அவன்,_

_உரத்த குரலில் கத்தினான்: 'கடவுளே, என்னோடு பேசுங்களேன்!' உடனே உரத்த இடியோசை, எழுந்தது,_


_*அதையும் பொருட்படுத்தாத அவன்,*_ _*'பேசாவிட்டாலும், உன்*_ _*தரிசனமாவது தரக்கூடாதா' என்று*_

_*இறைவனிடம் கேட்டான்.*_


_சுடர்விட்டுப் பிரகாசித்தபடி,_

_வானில் ஒரு நட்சத்திரம் உதித்தது. அதைக் கவனிக்காமல் அவன் கேட்டான்:_


_*'ஏதாவது ஓர் அற்புதம் நிகழ்த்த மாட்டாயா"*_


_கடவுள் மெல்லக் கீழே இறங்கி, பட்டாம்பூச்சியாக அவனைத் தீண்டினார்._


_*அவனோ தன் மேல் அமர்ந்த பட்டாம்பூச்சியை கைகளால் தட்டிவிட்டு,*_ _*நடந்தபடி சொன்னான்.*_

_*'கடவுள் இல்லை இருந்திருந்தால் என்னோடு பேசி இருக்கலாம்.*_


_பார்க்க முடிந்திருக்கும். அற்புதமாவது நிகழ்ந்திருக்கும் எதுவுமே நடக்க-வில்லையே"_ 


_*கதையைக் கேட்ட சீடன் சொன்னான்.*_


_"புரிந்தது குருவே கடவுள்,_

_தான் இருப்பதை வெளிப்படுத்திக் கொண்டு தான் இருக்கிறார்._

_நாம் தான் புரிந்து கொள்வதில்லை!"_


_*நீதி:*_

_*இங்கு அங்கு என்றில்லாமல் கடவுள் "எங்கும்" நிறைந்து இருக்கிறார்.*_

_*மனிதர்கள் தான் அவரைப் (உணர்வதில்லை) பார்ப்பதில்லை.*_

No comments:

Post a Comment