🙏📚📚📚📚📚📚📚📚🙏
*🙏பிறவி பயனை எட்டாமல்..!!📚*
*~ஸ்ரீராமகிருஷ்ணரின் எளிய தத்துவ கதை.*
*ஒருவன் தனது பாயைச் சுருட்டி கக்கத்தில் வைத்துக் கொண்டு தெருக்கூத்து பார்க்கச் சென்றான்.*
*கூத்து தொடங்காததால் அங்கேயே பாயை விரித்து படுத்தவன் தூங்கி விட்டான்.*
*விழித்துப் பார்த்த போது கூத்து முடிந்திருந்தது.*
*எனவே பாயை எடுத்து கொண்டு வீடு திரும்பினான்.*
*உலக வாழ்க்கையில் உண்மை உயிர் 'அனுபவம்' பெறாமல்..*
*உண்பது உறங்குவது மலம் கழிப்பது கத பேசுவது பொழுதை போக்குவது என..,*
*வீணாக மறுபிறப்பு எடுப்பவர்கள், கூத்து பார்க்க சென்று கூத்தை 'பார்க்காமல்' (பிறவி பயனை எட்டாமல்) வந்தவர்கள்தான்.*
*சுருட்டி எடுத்துச் சென்ற பாய்தான் 'கர்மா'அல்லது 'இருவினை'களின் தொகுப்பு.*
✍️~ஸ்ரீ ராமகிருஷ்ணர்.
🙏📚📚📚📚📚📚📚📚🙏

No comments:
Post a Comment