*
ஞான முட்டை*

*அக்கால குருகுலத்தில் தங்கிப் படித்த மாணவனுக்கு ஒரு சந்தேகம் வந்தது.*
*ஞானம் வழங்க குருவால் முடியுமானால்,*
*அதனை உடனே தர வேண்டியதுதானே...*
*ஏன் இவ்வளவுகாலம் காத்திருக்கவும் நோகவும் வைக்கிறார்?*
*அதை குருவிடமே கேட்டான்.*
*குருவி முட்டை ஒன்றை அவன் கையில் கொடுத்த குரு,*
*இதற்குள் என்ன இருக்கிறது? என்று கேட்டார்...!*
*குருவி...! என்றான் சீடன்.*
*எங்கே அதை காட்டு! இப்படி குரு கேட்டார்.*
*சீடன் சொன்னான். அது எப்படி முடியும் ? உரிய காலம் பக்குவமடைந்தால் அது தானாகவே வெளி வரும்...!*
*அப்படித்தான் ஞானமும்... இறை கல்வி அல்லது சாகா கல்வியால் பக்குவப்பட்டால் அது தானாக வருமே தவிர நினைத்தவுடன் தந்துவிட முடியாது என்றார் குரு...!*
*இப்போது சீடனுக்கு புரிந்தது தங்களுக்கும் புரிந்திருக்கும்..
*













[3/23, 8:08 PM] NDM Gopal Krishnan: 






















*
ஞானம
*


*சாது ஒருவர்d இமாலயத்துக்கு தவம் செய்யப் போனார். மிக நீண்ட காலம் அங்கே தங்கி தவம் செய்தார்.*
*தனிமை,மௌனம். ஒரு கட்டத்தில் அவர் தான் போதுமான முதிர்ச்சியும் ஞானமும் அடைந்து விட்டதாக எண்ணினார்.*
*மனம் முழுவதும் அமைதி அவரை ஆட்கொண்டிருந்தது. சரி, இதுதான் திரும்பிச் செல்ல சரியான தருணம் என்று கீழே இறங்கி நகரத்துக்கு வந்தார்.*
*வரும் வழியில் ஒருவனைப் பார்த்தார். "கோயில் எங்கே இருக்கிறது?" என்று கேட்டார்.*
*என்னங்க?" என்றான் அவன்.*
*-வருடக்கணக்கில் பேசாததால் குரல் சரியாக வரவில்லை போலும் அந்த சாதுவுக்கு.*
*இன்னொரு முறை கேட்டார்.*
*இப்போதும் அவனுக்குக் கேட்கவில்லை.* *"சரியா சொல்லுங்க சாமி, என்ன கேட்கறீங்க? முதல்ல நீங்க யாரு?* *ஊருக்கு புதுசா?"*
*அவ்வளவு தான். கோபம் பொத்துக்கொண்டு வந்து விட்டது அவருக்கு*
*அற்பப் பதரே, என்னையா தெரியவில்லை? வருடக்கணக்கில் இமாலயத்தில் தவம் செய்து ஞானம் தேஜஸ் எல்லாம் பெற்று வந்திருக்கிறேன், என்னிடம் எப்படிப்பேசுவது என்று தெரியவில்லை?*
*கையில் வைத்திருந்த தடியை வைத்து அவனை அடிக்கத் தொடங்கி விட்டார்.*
*சாதுவுவின் வருடக்கணக்கிலான சாதகம் ஒரு நொடியில் விழுந்து விட்டது.*
*நீங்கள் எங்கே போனாலும் இமாலயத்துக்கு தப்பித்துப் போனாலும் அதே ஆள் தான். சூழ்நிலை தான் மாறுகிறது.*
*அதே துருப்பிடித்த பழைய ஆள் தான். கோபம், முட்டாள்தனம், பைத்தியக் காரத்தனம், ஈகோ எதுவும் மாறுவதில்லை.*
*உண்மையில் நீங்கள் ஞானம் பெறத்தகுதியான இடம் இமாலயம் அல்ல. அங்கேதான் உங்களைக் கோபப்படுத்த, உங்கள் தன்முனைப்பை சீண்ட யாருமே இருக்க மாட்டார்களே!*
*அங்கே நீங்கள் எதையோ அடைந்து விட்டதாக ஒரு போலியான உணர்வு தான் மேலோங்கும்.*
*உண்மையான சோதனை உங்களுக்கு மக்களோடு மக்களாக பொது சந்தையில் தான் கிடைக்கும்.*
*ஜன சந்தடியில் இருக்கும் போதுதான் உங்கள் ஞானத்துக்கு உரைகல் கிடைக்கும்.*
*அங்கே இருந்து கொண்டு புழங்கிக் கொண்டு சமநிலை பெற்று ஞானம் பெறுபவனே உண்மையான ஞானி-சித்தர்- மகான் ஆவர்.*












No comments:
Post a Comment