*
திருமந்திரம்- சித்த வேத கதைகள்
*


*
காலைத் தூக்கிப் கீழே வையுங்கள்.....
*


*#ஒரு பெரிய மரத்தின் மேல் குயில் ஒன்று அமர்ந்து மெல்ல கூவியது...*
*இந்த மரத்தின் கீழ்ப்பகுதியில் குரு அமர்ந்திருக்க, அவர் முன் அமர்ந்திருந்தான் சீடன் விஸ்வநாத பிரம்மச்சாரி.*
*#சீடனது கண்கள் கலங்கி இருந்தன... அவன் தன் கைகளால் குருவின் கால்களை பற்றியவாறே பேசினான்.*
*”குருவே உங்களிடமிருந்து வேத சாஸ்திரத்தையும் பிரம்ம சூத்திரத்தையும் முழுமையாக கற்றுகொண்டேன். உண்மை பொருளை கூறும் அனைத்து கருத்துக்களையும் நீங்கள் எனக்கு விளக்கியுள்ளீர்கள்.*
*#உங்களுக்கு பணிவிடை செய்வதிலும், உங்களுடன் இருப்பதிலும் எனக்கு நிகரில்லாத ஆனந்தம் கிடைக்கிறது.*
*இப்படி இருக்க என்னை ஏன் வேறு இடத்தில் இருக்கும் ஒரு ஞானியை குருவாக ஏற்க கட்டளை இடுகிறீர்கள்? என்றான்.*
*#அவனை மெல்ல தனது கரத்தால் தூக்கிய குரு, அவனை தீர்க்கமாக பார்த்தார். விஸ்வநாதா! சாஸ்திர ஞானத்தை மட்டும் தான் என்னால் உனக்கு வழங்க முடிந்தது. பிரம்ம ஞானத்தை வழங்க உனக்கு வேறு குரு ஒருவர் காத்திருக்கிர்றார்.*
*#அந்த குரு, காசிக்கு அருகில் இருக்கும் வனத்தில் வசிக்கும் அவரை கண்டு ஞானம் அடைவாயாக!,*
*வளர்ச்சி அடையும் வரைதான் புழு கூட்டில் வசிக்க முடியும். அதன் பின் வண்ணத்து பூச்சியாக மாற கூட்டை கடந்து சென்றாக வேண்டும்...செல் சீடனே!என்றார் குரு.*
*பிரிய மனமில்லாமல் தனது குருநாதரிடமிருந்து விடைபெற்றான் விஸ்வநாத பிரம்மச்சாரி.*
*#காசியை அடைந்தான். அவன் அங்கு வீற்றிருக்கும் விஸ்வநாதரை தரிசித்தான். நகரின் வெளியே இருக்கும் வனத்தை நோக்கி நடந்தான்.*
*வனத்திற்கு உள்ளே இரு நாட்களாக நடந்து உலாவிய போதும் யாரும் அவன் கண்களுக்கு தட்டுபடவில்லை.*
*#தனது குரு அனுப்பியதன் நோக்கம் புரியாமல் குழப்பம் மேலோங்க பயணத்தை விடாது தொடர்ந்தான்.*
*பசியும் தாகமும் அவனை சோர்வடையச் செய்தது. வழியில் தென்பட்ட தடாகம் ஒன்று கண்களுக்குத் தெரிய, அதில் நீர் அருந்த குனிந்தான்.*
*அந்த தடாகத்தின் மேல்பரப்பில் அமைந்திருந்த கோயில் கோபுரம் நிழலாக நீரில் பிரதியாகத் தெரிந்தது.*
*திடுக்கிட நிமிர்ந்து மேல் நோக்கி பார்த்தான். ஆலய கோபுரம் ஒன்று தெரிந்தது.*
*#நடு_வனத்துக்குள் கோயிலா? கோபுரத்தை வணங்கிவிட்டு, ஆச்சரியத்துடன் அந்தக் கோயிலுக்குள் நுழைய அடியெடுத்து வைத்தான்.*
*கோயில் வாசலை அடையும் முன் உள்ளே இருந்து ஓர் குரல் வந்தது.*
*வா!, விஸ்வநாதா!' உனக்காகத்தான் காத்திருக்கிறேன். உனது குரு என்னை பார்க்கத்தான் அனுப்பினார் என்று.*
*#தனது_ஞான குருவை காணும் ஆவலில் கோயிலின் உள்ளே சென்றான் விஸ்வநாதன்.*
*அங்கே அவன் கண்ட காட்சி அவனை மாபெரும் அதிர்ச்சி அடைய செய்தது.*


*இதைக் கண்ணுற்ற விசுவநாதனால் கோபத்தை கட்டுபடுத்த முடியவில்லை.* *எனது குருஉங்களை பற்றி உயர்வாக கூறி அனுப்பினார். நீங்கள் அவர் சொன்னதற்கு நேர்மாறாக அல்லவா இருக்க்கிறீர்கள்.* என கூறியவன்,.....
*
#ஐயா_சற்று சிவன் மேல் இருக்கும் காலை எடுத்து கீழே வையுங்கள்"* என்றான்.

*அந்த பரதேசி சற்றும் அவனது கருத்துக்களை காதில் போட்டுக் கொள்ளாமல் அவனை பார்த்து மேலும் கூறினார்.........*
*நீ என்ன? அவ்வளவு பக்திமானா? நீ வேண்டுமானால் எனது கால்களை எடுத்து வேறு இடத்துப் பக்கம் திருப்பி வை. என்னால் கால்களை எடுக்க முடியாது என்றார்.*
*#கோபத்தின் உச்சகட்டத்திற்கு சென்ற விஸ்வநாதன், அவரை நோக்கி வேகமாக வந்து, அவரின் கால்களை பற்றி சிவலிங்கத்தின் மேலிருந்து எடுத்து வேறு இடத்ததிற்கு மாற்ற காலை வேறு பக்த்திற்குத் திருப்பி வைத்தான்.*
*காலை தூக்கி வைத்த இடத்தில் சிவ லிங்கம் தெரிய, வெடுக்கென்று காலை மீண்டும் தூக்கி பிடித்து, வேறொரு திசைக்கு சுழற்றினான்.*
*அங்கும் அதே மாதிரி......காலை வைக்கப் போக, அங்கும் சிவலிங்கம் காட்சி தெரிய, காலை கீழே வைக்காது, தூக்கிய வண்ணம் நின்றிருந்தான்.*
*
#கால்களை எங்கு வைத்தாலும் அங்கே ஓர் சிவலிங்கம் முளைத்தெழுகிறதே என செய்வதறியாது விழித்தான்.*

*பல இடங்களில் காலை மாற்றி மாற்றி தூக்கி வைத்தாலும், அனைத்து இடத்திலும் சிவலிங்கம் தோன்றுகிறதே?............என யோசித்தவன்!.....*
*திடீரென ஒரு முடிவுக்கு வந்தவனாக.........*
*காலைப் பிடித்திருந்த தனது கைகளை தளர்த்திக் கொண்டு, அவருக்கு முன் குனிந்து, தனது தலையில் அவரின் கால்களை வைத்து அழுத்தினான்.*
*#அவனே_சிவமானான்...*
*அவனே சிவமானான்.......*
*அவனே சிவமானான்..........*
*திருவடி ஞானஞ் சிவமாக்கு விக்குந்*
*திருவடி ஞானஞ் சிவலோகஞ் சேர்க்குந்*
*திருவடி ஞானஞ் சிறைமல மீட்குந்*
*திருவடி ஞானமே திண்சித்தி முத்தியே!*
*
திருமந்திரம்.*

*அவன் திருவடி நம்மை பற்றுதல் கொள்ளும் அளவுக்கு நாம் ஒழுகியோங்க வேண்டும்
*

*
நூல் தொகுப்பு: சித்தவேதம்... கோகி
*













No comments:
Post a Comment