*
ஆன்ம கடன்
*


*ஒரு யுத்தத்தில் எதிரி நாட்டு இளவரசனை உயிரோடு பிடித்து இராஜாவின் முன்பு நிறுத்தினர்.*
*இளவரசன் தன் உயிருக்காகக் கெஞ்சி மன்றாடி தன்னை மன்னிக்கும்படியாக கேட்டுக்கொண்டான்.*
*அதற்க்கு ஒரு நிபந்தனை இருக்கிறது என்றார் வெற்றி பெற்ற ராஜா .*
*விளிம்புவரை தண்ணீர் நிரப்பப்பட்ட பாத்திரம் ஒன்று உனது கையில் தரப்படும்.*
*அது முக்கிய சாலை ஒன்றின் வழியாக ஒரு சொட்டு தண்ணீர் கூட கீழே சிந்தாமல் குறிப்பிட்ட நேரத்துக்குள் ஒரு மையில் தூரம் கொண்டு செல்ல வேண்டும்.*
*கூடவே உருவிய பட்டையத்தோடுஎனது வீரர்கள் வந்துக்கொண்டு இருப்பார்கள்.*
*ஒருதுளி தண்ணீர் கீழே கொட்டினாலும் கூட அவர்களின் வாள் உன் தலையைச் சீவிவிடும்.*
*வெற்றியோடு முடித்துவிட்டால் விடுதலை"*
*என்று பேரரசர் தனது நிபந்தனையை விதித்தார்.*
*குறிப்பிட்ட நேரம் வந்தது.*
*இலட்சக்கணக்கான மக்கள் அந்த சாலையின் இரு பகுதிகளிலும் குழுமியிருந்தனர்.*
*போர் வீரர்கள் சாலையை ஒழுங்கு செய்து கொடுத்தனர்.*
*பேரரசர் முன்னிலையில் முழுவதும் தண்ணீர் நிரப்பிய பாத்திரம் இளவரசனின் கைகளில் கொடுக்கப்பட்டது.*
*ஒரு பகுதியில் இருந்த மக்கள் இளவரசனை ஊக்குவித்து உற்ச்சாகப் படுத்தினர்.*
*மறுபக்கத்தில் இருந்தவர்களோ கேலியும் பரிகாசமும் செய்து கூச்சலிட்டனர்.*
*இளவரசனின் இருபுறமும் வீரர்கள் உருவிய வாளோடு தண்ணீர் சிந்துமானால் வெட்டும்படி கவனித்துக்கொண்டிருந்தனர்.*
*பாத்திரத்தை உறுதியாய் பிடித்துக்கொண்டான் இளவரசன் நடக்க சுற்றுப்புறத்திலிருந்து கூச்சலும், பரிகாசமும், ஆர்ப்பாட்டங்களும் கேட்டுக்கொண்டே இருந்தது.*
*எனினும் எதையும் பொருட்படுத்தாதபடி தண்ணீரிலே முழு கவனமும் வைத்து ஓட்டத்தை* *வெற்றியோடு* *ஓடி முடித்தான் இளவரசன்.*
*இளவரசனை பாராட்டிய பேரரசர்,*
*"இளவரசனே உன்னை கேலி செய்தவர்களுக்கு நீ தண்டனை வழங்கலாம்.*
*உன்னை உற்ச்சாக படுத்தியவர்களுக்கு நன்றி சொல்லலாம்.*
*அவர்களை கவனித்து வைத்திருக்கிறாயா?" என்று கேட்டார்.*
*"என்னை போற்றுபவர்களை நான் கவனிக்கவில்லை,*
*தூற்றுபவர்களையும் நான் பார்க்கவில்லை.*
*எனது கவனமெல்லாம் தண்ணீரில் அல்லவா இருந்தது."*
*விடுதலையோடு கூட அரசர் ஒரு ஆலோசனை தந்தார்.*
"இளவரசனே!
*பாத்திரத்தில் உள்ள தண்ணீர் தான் உன் சரீரத்தில் உள்ள 'ஆன்மா'*
*வாழும் நாட்களிலே உன் ஆத்மாவில் கண்ணும் கருத்துமாக இருந்து கடைசியில் அதை 'சிருஷ்டிகர்த்தாவிடம்'*
*ஒப்படைக்க வேண்டும்*.

*போற்றுவோரைக் கண்டு பெருமை கொள்ளாதே*

*தூற்றுவோரைக்கண்டு சோர்ந்துப் போகாதே.*
*ஆத்மாவில் கவனம் வை*" என்றார் பேரரசர்.
*எல்லாம் வல்ல இறைவனின் அருளை பெற, இயற்கையோடு இணைவோம்..
*














No comments:
Post a Comment