

*ஒரு பைத்தியகாரன் மீது கருணை கொண்ட சீடன்,அவரைத் தனது மடலாயத்து குருவிடம் அழைத்து சென்றான்.*
*குரு சொன்னார், "அவரை அப்படி ஓரமா மூலையில் உட்கார விடுங்கள்.உணவை, நீரை அருகில் வையுங்கள்.ஆனால் உண்ணும் படிக் கூற வேண்டாம்.பசித்தால் அவரே எடுத்து சாப்பிடுவார்.அவருக்கு எந்த உதவியும் செய்ய வேண்டாம்,நீங்கள் யாரும் கண்டு கொள்ளவும் வேண்டாம்,"* என்றார்.*
*அவர் கத்துவார், கற்களை வீசுவார். ஆனால் அவரை யாரும் அங்கு கண்டு கொள்ளவில்லை.சீடர்கள் அவரவர் வேலைகளைப் பார்த்தனர்.*
*அந்த பைத்தியக்காரருக்கு எதிர்வினையாற்றுவது இல்லாது போனது. நாட்கள் நகர்ந்தன,*
*ஒரு நாள் அமைதியாக குரு முன் வந்த பைத்தியகாரன், "எனக்கும் தியானம் சொல்லித் தருவீர்களா..?" என்று கேட்டான்.*
*இது இன்றும் திபெத்திய புத்தமடலாயங்களில் நடக்கும் சிகிச்சை முறை.*
*"எதிர்வினையாற்றயாரும் இல்லை என்றால் அவர் அமைதியாகி விடுகிறார்", என்கிறார்கள் திபெத்திய லாமாக்கள்.*
*"மற்றவர் பார்க்கவில்லை என்றால் பைத்தியகாரத்தனங்கள் வளர்ந்து கொண்டே போகாது"!!!*
*தர்க்கம் பண்ணாதீர்கள் .. நம்முடைய பேச்சே தர்க்கத்திற்கு தீனி...நம் அமைதியே அதற்குப் பட்டினி ..!!*
*அமைதியாக இருங்கள் .. எல்லாம் சரியாகும் . ஒரு வேளை சரியாகவில்லை என்றாலும் பரவாயில்லை ..!!*
*நீங்கள் சரியாக இருப்பீர்கள் ..*
*நம்மிடம் இருந்துதான் எதிர்வினை உருவாகிறது.. "அது நாம் மற்றவர்களைப் குறை கூறும்போது..."*
*நிதானம் நீளமானது .. நிம்மதியை தரக்கூடியது!!*
*வாழ்க நிதானத்துடன் .
*

கோகி...










No comments:
Post a Comment