*ஜெகத் ஜோதி சுவாமி சிவானந்த பரமஹம்சர் திருவாய் மலர்ந்தருளியது.*
*
குரு தத்துவம்
*


*காரண குரு, காரிய குரு என இரண்டு குரு எல்லோருக்கும் உண்டு.*
*உலகம் என்பது காண்பதற்கும் , கேட்பதற்கும் , அறிவதற்கும் உள்ள மூன்று நிலைமைகளோடு உள்ளது; அதனால் உலகம் காரிய குருவாகிறது.*
*காண்பதற்கும் , கேட்பதற்கும், அறிவதற்கும் காரணமாயிருப்பது மனம் ஆனதால் அம்மனமே காரண குருவாகிறது.*
*மனமாயிருக்கின்ற குருவே பந்தத்திற்கும் - மோட்சத்திற்கும் காரணம் ஆகிறது.*
*மனமாயிருக்கின்ற குருவே பந்தத்திற்கும் மோட்சத்திற்கும் காரணம் ஆகிறது.*
*மனமாயிருக்கின்ற குருவின் ஸ்தானம் இருதயத்தில் ஆகும்.*
*மனத்தினுடைய உற்பத்தி ஜீவனிலிருந்தாகும்.*
*உப்பானது தண்ணீரில் இருந்து உண்டாகி பின் அதிலேயே லயப்படுவது போல் மனமானது ஜீவனிலிருந்து உண்டாகி , பின் ஜீவனிலேயே லயப்பட்டு ஜீவன் மட்டுமாகிறது.*
*அதனால் தான் தூங்கும் போது நம்மால் காணவே , கேட்கவோ , அறியவோ முடிவதில்லை.*
*மனத்தினுடைய ஸ்தானம் இருதயத்தில் ஆகும். அந்த இருதயம் பிரகாச வஸ்துவாகும்.*
*மனமாகிய குருவினுடைய ஸ்தானமான இருதயம் ஆகாயத்தில் ஆகும்.*
*ஆகாயத்தின் ஸ்தானம் சிரசிலாகும்.*
*சிரசின் மத்தியில் இருதயம் இருக்கிறது.*
*நூல்: உலக சாந்திக்குள்ள ஜீவிதம்.*
No comments:
Post a Comment