*"
வாழ்க்கைக்கு எது தேவை?"
*


*தத்துவ ஞானி சாக்ரடீஸ்.. ஒருமுறை கிரேக்க நாட்டின் தலைநகர் ஏதென்ஸின் அங்காடித் தெருக்களில் சுற்றிக்கொண்டே வந்தார்.*
*நாலைந்து தெருக்களின் உள்ளே நுழைந்து கடைகளில் உள்ள பொருட்களையெல்லாம் கூர்ந்து கவனித்தார்.*
*எதுவும் வாங்கவில்லை.*
*பின்னர், மறுநாளும் அங்காடித் தெருவில் நுழைந்து கடைகளில் உள்ள பொருட்களைக் கூர்ந்து நோக்கிய வண்ணம் நடந்து சென்று விட்டார்.*
*இப்படியே ஒரு வாரமாக அங்காடித் தெருக்களில் பல கடைகளை சுற்றிப் பார்த்து விட்டுச்சென்று விடுவார்.*
*ஏழாம் நாள்...*
*சாக்ரடீஸ் அங்காடித் தெருவில் உலா வருவதைக்கண்ட ஒரு கடைக்காரர், "அய்யா நானும் கடந்த ஆறு நாட்களாகப் பார்த்துக் கொண்டே வருகிறேன். கடைத்தெரு வழியே வருகிறீர்கள், கடையில் உள்ள பொருட்களைப் பார்க்கிறீர்கள், ஆனால் இது நாள் வரையிலும் எந்தப் பொருளையும் வாங்கவே இல்லை!*
*உங்களுக்கு எந்தப் பொருள் வேண்டும் என்றால் நான் அந்தப் பொருளை வரவழைத்துத் தருவேனே?" என்று கேட்டார்.*
*அதற்கு சாக்ரடீஸ், "அன்புள்ளம் கொண்ட கடைக்காரரே... இங்குள்ள பல கடைகளில் உள்ள பொருட்கள் எவையும் என் வீட்டில் இல்லை!*
*'இந்தப் பொருட்கள் எவையும் இல்லாமல் என்னால் வாழ முடிகிறதே!' என்று எண்ணிப் பார்த்து ஒவ்வொரு நாளும் மகிழ்கிறேன்...", எனக் கூறினாராம்.*
*கடைக்காரர் வியந்துபோய் விக்கித்து நின்று விட்டாராம்!*
*ஆம், நமது நிம்மதியான வாழ்க்கைக்கு...*
*தேவைப்படாத பொருட்கள் நம்மிடம் இருப்பதை விட...*
*இல்லாத போது தான் அதிக சந்தோஷத்தை கொடுக்கும்.*
*ஆகவே, ஆடம்பர மோகத்தில்... அத்தியாவசியத்தை தவற விட்டு விடக்கூடாது.*
*சிந்திப்போம்... சிந்தனை சிறப்பாக இருக்கவேண்டுமெனில் "தியானம்" பழகவேண்டும்*
*..தேடிப் போகவேண்டாம்.. தேடுவது நம்மிடம் வந்துசேரும் வகையில் வாழ்க்கை பாதையை சீரமைப்போம்.
*

*நன்றி...!* கோகி



No comments:
Post a Comment