*
..துன்பம் வரும்போது மட்டும் கடவுள் ஞாபகம்..*


*ஒரு கட்டுமான எஞ்சினியர்… 13 வது… மாடியிலே வேலை செய்து கொண்டு இருந்தார்…*
*ஒரு முக்கியமான வேலை…*
*கீழே தரைப்பகுதியில் வேலை செய்து கொண்டு இருந்த கொத்தனாருக்கு ஒரு முக்கியமான செய்தி சொல்ல வேண்டும்…*
*செல் போனில் கொத்தனாரை கூப்பிட்டார் எஞ்சினியர்..*
*ம்ஹும்..கொத்தனார் வேலை மும்முரத்தில், சித்தாளுடன் பேசிக் கொண்ட இருந்தார்…*
*போனை எடுக்கவில்லை..*
*என்ஜினியரும் உரக்க கத்திப் பார்த்தார்..*
*அப்பொழுதும்.. கொத்தனார்.. மேலே பார்க்கவில்லை…*
*இவ்வளவுக்கும் ..கொத்தனார் வேலை செய்யும் இடத்தில் இருந்து , அவரால் என்ஜினியரை நன்றாகப் பார்க்க முடியும்…*
*எஞ்சினியர் என்ன செய்வதென்று யோசித்தார்…*
*ஒரு பத்து ரூபாய் நோட்டை எடுத்து, மேலே இருந்து, கொத்தனார் அருகில் போட்டார்…*
*ரூபாயைப் பார்த்த கொத்தனார், அதை எடுத்து பையில் போட்டுக் கொண்டார்…*
*ஆனால் சற்றும் மேல் நோக்கிப் பார்க்கவில்லை…*
*என்ஜினியருக்கு ஒரே கோபம்..*
*இருந்தாலும் பொறுத்துக் கொண்டு…*
*ஒரு ஐநூறு ரூபாயை கொத்தனார் மேல் போட்டார்…*
*அதையும் எடுத்து சட்டைப் பையில் வைத்துக் கொண்டு… கொத்தனார் மும்முரமாக இருந்தார்…*
.
*எஞ்சினியர்.. பொறுமை இழந்து ஒரு சின்ன கல்லை எடுத்து, கொத்தனார் மீது போட்டார்…*
*அது அவரது தோள் மீது பட்டு நல்ல வலியோடு, மேலே பார்த்தார்…*
*அப்பொழுதுதான் எஞ்சினியர் தன்னை அழைத்தார் என்பதை உணர்ந்தார்..*
*மனிதனும் அப்படித்தான்….*
*மேலே இருந்து இறைவன் அவனை அழைப்பது அவனுக்கு புரிவதில்லை… உலக மாயைகளில், சிக்கித் தவிக்கின்றான்...*
*இறைவன் அவனுக்கு அருட்கொடைகளை அளிக்கின்றான்...*
*அப்பொழுதும் அவன் இறைவனை ஏறிட்டுப் பார்ப்பதில்லை...*
*ஆனால் ஒரு துன்பம் நேரும் பொழுதுதான் இறைவனை ஏறிட்டுப் பார்க்கின்றான்.*
*
புரிந்து கொள்ளுங்கள்..
*


*
கிடைத்ததற்கு நன்றி பாராட்டுங்கள்..
*


*
கிடைக்கவேண்டும் என்று பிரார்த்தனையும் செய்யுங்கள்..
*


நன்றி.. கோகி












No comments:
Post a Comment