*
ஒரு சம்பவமும், ஒரு அனுபவமும்*






*
Sugar vs Ants
*







*
வெற்றிக்கு வழி*

*ராமகிருஷ்ணர் மடத்தில் நடகக இருந்த ஒரு விழாவிற்கு நிறைய லட்டுகளை தயாரித்து வைத்து இருந்தனர்.*
*எறும்புகளிடம் இருந்து அவற்றை எப்படி பாதுகாப்பது என்று யோசித்தனர்.
*

*கடைசியில் ராமகிருஷ்ண பரமஹம்சரிடம் யோசனை கேட்டனர்.*
*லட்டு வைத்திருந்த பாத்திரத்தை சுற்றி சர்க்கரையால் வட்டம் போட்டார் அவர்.*
*இரவில் எறும்புகள், சர்க்கரையை மட்டும் சுவைத்து சென்று விட்டன. லட்டு பாத்திரத்தை நெருங்கவே இல்லை.
*

*காலையில், அதை பார்த்து விட்டு, ராமகிருஷ்ணரிடம், லட்டு பாத்திரத்தை எறும்புகள் நெருங்காததை தெரிவித்தனர்.*
*அப்போது, ராமகிருஷண பரமஹம்சர், ' எறும்புகள் முன்னேறி சென்றிருந்தால், அவற்றுக்கு லட்டுகளே கிடைத்திருக்கும்.*
*இந்த எறும்புகளை போல தான், உலகாயத பொருள் பணம் சுகம் இன்பமே போதும் என பல மனிதர்கள் உள்ளனர்.*
*'சிறு வெற்றியே போதும் என, பெரும் வெற்றிகளை கோட்டை விட்டு விடுகின்றனர்...'*
*சில மனிதர்களே.. நிரந்தர இன்பத்தை, பேரின்பமான ஞானத்தை.. சிறு சிறு அற்ப விசயங்களை தவிர்த்து.. அயராது தளராது.. தீவிர அர்ப்பணிப்புடன் முன்னேறி சென்று.. பெரும் செல்வமாகிய இறவாத- பிறவாத ஜீவமுக்தி எனும் பேரின்ப பெருவாழ்வு அடைகின்றனர்.*
*என்று தாந்த்ரீக ஞானி ஶ்ரீராமகிருஷ்ணர் தெரிவிக்கின்றார்.*















No comments:
Post a Comment