*
*
என் மகனுக்கு/ மகளுக்கு ஏன் திருமணமாக தாமதமாகிறது..
*


*༺
༻*

*
கர்மவினைகள் எப்படி உருவாகிறது..
*


*
அதன் ரகசியம் என்ன..
*


*༺
༻*

*ஒரு சமயம் ?ஒரு அரசன் அந்தணர்களுக்கு உணவளிப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தான். அப்படி ஒரு நாள் உணவளித்துக் கொண்டிருக்கைய ல் வானில் ஒரு கழுகு, தன் இரையான இறந்த பாம்பு ஒன்றை தன் கால்களில் பற்றிக் கொண்டு கடந்து சென்றது.*
*༺
༻*

*பாம்பின் வாயிலிருந்து ஒரு சில துளிகள் விஷம் அரசன் வைத்திருந்த உணவுப் பாத்திரத்தில் விழுந்து விட்டது. எவரும் அதை கவனிக்கவில்லை அரசன் அந்த உணவை ஒரு அந்தணருக்கு அளிக்க, அதை உண்ட மறுகணமே அவர் இறந்து போனார். அரசன் மிகவும் வருத்தம் அடைந்தான்.*
*༺
༻*

*கர்மாக்களுக்கான வினைகளை நிர்ணயிக்கும் சித்திரகுப்தனுக்கு குழப்பமாகி விட்டது.* *யாருக்கு இந்த கர்மவினையைக் கொடுப்பது?*
*கழுகிற்கா, பாம்பிற்கா அல்லது அரசனுக்கா? கழுகு அதன் இரையைத் தூக்கிக் கொண்டு சென்றது அது அதன் தவறு இல்லை. இறந்து போன பாம்பின் விஷம் அதன் வாயிலிருந்து வழிந்தது பாம்பின் குற்றம் இல்லை. அரசனும் இதை வேண்டுமென்றேசெய்ய வில்லை. அது அவனை அறியாமல் நடந்த விஷயம். சரி தன் எஜமானனான எமதர்மனிடமே கேட்கலாம் என்று எமனிடம் சென்று தன் குழப்பத்தைக் கூறினான் சித்திரகுப்தன்.*
இதைக் கேட்ட *எமதர்மன்*, சற்று நேர சிந்தனைக்குப் பிறகு, இதற்கான விடை விரைவில் கிடைக்கும் என்றும், *காலம் வருமவரை பொறுமையாக இருக்கவும்* அறிவுறித்தினான்.
*༺
༻*

*ஒரு நாள்... சில அந்தணர்கள் உதவி நாடி அந்த அரசனைக் காணச் சென்றார்கள். மகரயாழ் அரண்மணைக்கு வழி தெரியாமல், சாலையோரமாக வியாபாரம் செய்து கொண்டிருந்த பெண்மணி ஒருவரிடம் வழி கேட்டார்கள். அவளும் சரியான பாதையை அவர்களுக்கு விளக்கி விட்டு அவர்களிடம் "ஒரு விஷயம். சற்று எச்சரிக்கையாக இருங்கள். இந்த அரசன் அந்தணர்களைக் கொல்பவன்" என்று கூறினாள். இந்த வார்த்தைகளை அவள் கூறி முடித்த்தும், சித்திரகுப்தனுக்கு தெளிவு பிறந்து விட்டது.*
*அந்தணரைக் கொன்ற கர்மாவின் வினை இந்த்த் பெண்மணிக்கே*
என முடிவு செய்தான்.
*༺
༻*

*இதிலிருந்து நாம் புரிந்து கொள்ள வேண்டிய விஷயம்,*
*
மற்றவர்கள் மீது பழி சுமத்தும் போது அதில் உண்மை இருக்குமானால் பழி சுமத்துபவருக்கு அந்த கர்மாவில் 50 விழுக்காடு வந்து சேரும் பழி சொன்னதற்காக.* *
நடந்த எதையுமே உணராமல் அபாண்டமாக பழி சுமத்துபவர்களுக்கு கர்மவினை 100 விழுக்காடு வந்து சேரும்.*


*எனவே, மற்றவர்கள் மீது பழி சொல்லும் முன் யோசிக்க வேண்டும். பேசும் போது எச்சரிக்கையுடன் பேச வேண்டும்.*
*
ஏதேதோ காரணம் கூறி பொருத்தம் இல்லை என்று கூறினால்.. நன்றி என்று கூறி அதோடு அவற்றை மறந்துவிடுங்கள்... மாறாக அவர்கள்மீது வீன் பழி போட்டால் இரட்டிப்பு கர்மவினை வந்து சேரும்... ஆகவே யாரையும் குற்றம் கூறாதீர்கள்...*


*
ஸ்ரீமத் பாஹவதத்திலிருந்து..... கோகி- ரேடியோ மார்கோனி - புது தில்லியிலிருந்து..*













No comments:
Post a Comment