*
தியானம்?
*


*
ஜென் குருவிடம் ஒருவன் வந்து..*

*‘எப்படி தியானத்தில் ஈடுபடுவது...???’*
*என்று கேட்டான்*
*‘என்னைப் பார்த்துக் கொண்டிரு..*
*தியானம் உனக்குக் கைவரும்’ என்றார் ஜென் குரு*
*அவனும் சம்மதித்தான்*
*காலையில் குரு எழுந்தார்*
*குளித்தார்*
*பகல் முழுவதும் தோட்ட வேலையில் ஈடுபட்டார்*
*உணவு வேளையில் உண்டார்*
*ஆனால்*
*வழிபாடு, பிரார்த்தனை, தியானித்தல், படித்தல் என்றெல்லாம் செய்யவில்லை*
*இதில் மனம் சலித்த சீடன்*
*‘எப்போது நான் தியானம் கற்பது...???’ என்றான்*
*‘நான் குழி வெட்டியதும் தியானம்தான்*
*தோட்டம் போட்டதும் தியானம்தான்*
*உணவு உண்டதும் தியானம்தான்*
*எனது வாழ்வே தியானம்தான்*
*எனது வாழ்வில், தியானம் என்ற ஒன்று தனியாக இல்லை’*
*என்று சிரித்தபடி சொன்னார் ஜென் குரு*
*மாசற்ற மனம் உள்ளவர் விழி மூடி அமர்ந்திருக்க அவசியமில்லை*
*நாம் அனைவரும் ஜென் குரு அல்ல*
*ஆயிரம் எண்ணங்கள் அலையடிக்கும் மனது நம்முடையது*
*ஆசை, அச்சம், கோபம், காமம், வெறுப்பு, பகை என்ற சிலந்திவலைப் பின்னலில் சிக்கித் தவிப்பவர்கள்*
*நெருப்புக்கும் வெள்ளத்துக்கும் நடுவில் நிற்பதுபோல்*
*நல்ல எண்ணங்களும், தீய விருப்பங்களுக்கும் இடையில் நடப்பதே வாழ்க்கை*
*நல்லதையே நாடு’ என்று அறிவு சொல்கிறது*
*எல்லாவற்றுக்கும் ஆசைப்படு என்று மனக் குரங்கு தினமும் பாடம் நடத்துகிறது*
*இந்தக குழப்பத்திலிருந்து எப்படி எப்போது நமக்கு விடுதலை என்பதுதான் கேள்வி....???*
*நாம் ஒன்று செய்வோம்*
*காலை-மாலை இரு வேளையும் தனிமையில் கொஞ்ச நேரம் கண்மூடி மெளனமாக அமர்ந்து, நம்மை நாம் உள்முகமாக யோசிப்போம்*
*நமது பலம்-பலவீனம், நிறை-குறைகளை நெஞ்சில் நிறுத்தி அன்றாடம் அலசுவோம்*
*தவறுகளைத் தவிர்க்க முடிவெடுப்போம்*
*பகையை வேரறுத்து, அன்பை விதைத்து விருட்சமாக வளர்க்க முயலுவோம்*
*ஒரே பிறவியில் புத்தனாக முடியாது என்கிறது பெளத்தம்*
*ஒரே நாளில் நாம் அனைவரும் முனிவர்களாகிவிட முடியாது*
*கொஞ்சம் கொஞ்சமாக மனதில் படிந்திருக்கும் அழுக்கை அகற்ற உள்முகத் தேடலில் ஈடுபடுவோம்*
*எத்தனை நாள்தான் வெளியே தேடி, வாழ்வை வீணாக்குவது....???*
*விழிப்பு உணர்வு இல்லாத விலங்குகளா நாம்...???*
*நமக்குள்ளே நம்மை தேடுவோம்*
*தினமும் இரவு உறங்குவதற்கு முன்பு*
*தினமும் பத்து நிமிடமேனும் கண்மூடி தியானிப்போம்*
*இப்படி சிறிய தியான பழக்கம் தான் வளர்ந்து முதிர்ந்து பிறகு நாள் முழுதும் எல்லா செயல்களிலும் வியாபித்திருக்கும் தியானமாக மாறும்.*
*துயர் களைந்து நிறைவளிக்கும் வாழ்வை வாழ்ந்து பார்ப்போம்..
*













No comments:
Post a Comment