*
சுவாசத்தை ஒழுங்குபடுத்தி, பச்சை குழந்தை மாதிரி மென்மையாகவும் நெகிழ்வாகவும் உன்னால் ஆக முடியுமா??*

*"
தாவோ தே ஜிங்"ல்-லாவோட்சு*

*லாவோட்சு கேட்கிற இந்தக் கேள்வியானது ஆழமான ஆய்வுக்கு உட்படுத்தப்பட வேண்டியது...*
*மென்மையாகவும் நெகிழ்வாகவும் இருப்பதற்கும் சுவாசத்திற்கும் சம்மந்தமுண்டா??*
*நிச்சயம் சம்மந்தமுண்டு..*
*மனதின் போக்கை காட்டக் கூடிய கண்ணாடி தான் சுவாசம்..*
*நீங்கள் அதிகமான கோபத்திலுள்ள போது உங்கள் சுவாசத்தை கவனியுங்கள்..*
*தாறுமாறாய் இயங்கும் அதோடு வெளிவறும் சுவாசத்தின் அங்குலம் அதிகரிக்கும்..*
*அதேவேளையில்..*
*பெருங்கொண்டாட்டத்தில் துள்ளிக் குதிக்கக் கூடிய நிகழ்வொன்றினில் உங்கள் சுவாசத்தை கவனியுங்கள் கிட்டதட்ட இதே போன்று சுவாசத்தின் அங்குலம் அதிகரித்துக் காணப்படும்..*
*ஆனால்...*
*சோகமின்றி அதேநேரம் பெருங்கொண்டாட்டுமுமின்றி இரண்டிற்கும் மத்திமமான ஓர் ஆழ்ந்த அமைதி நிலை அனுபவத்தில் உங்கள் சுவாசத்தை கவனியுங்கள்..*
*சீராகவும் வேகமான இயக்கமின்றி மென்மையாக நாசிவழி போவதும் வருவதுமாகவும் இருக்கும்..*
*இந்நிலையில் மனதிலும் ஆழ்ந்த அமைதி உண்டாகும்..*
*உடலின் எடைகூட ஒரு சுமையாய் தெரியாது...*
*எண்ணச் சந்தையில் நெரிசல் குறைந்திருக்கும்..*
*நம்முடைய செயல்பாடுகளும் மென்மையானதாய் இருக்கும்..*
*நடை கூட வேகமாய் இராது..*
*வார்த்தை உச்சரிப்பைக் கூட மனம் விரும்பாது..*
*பூக்களையும்,மரங்களையும் ரசித்தபடியே விழிகள் உலாவும்...*
*வானங்களும்,மேகங்களும் கண்களுக்கு விருந்தாகும்..*
*எதிர்வருவோரிடம் எல்லாம் எம்பெருமான் காட்சியளிப்பான்..*
*துள்ளிக்குதிக்க விரும்பாத அதேவேளையில் பேரானந்தத்துடன் அலைகள் அடங்கிய கடல் போல் மனம் அமைதியுறும்.*
*சுவாசத்தை கருவியாய் கொண்டுள்ள எல்லா யோக மார்க்கங்களின் இலட்சியமும் இதுவே.*
*ஏனெனில்,சுவாசம் மனதின் கடிவாளம்.*
*கடிவாளம் கைக்குள் அடங்க அடங்க மனமெனம் குதிரையின் ஓட்டம் நெறிப்படும்.*
*நெறிப்பட்ட மனம் நெகிழ்வினை அடையும் மென்மையில் திளைக்கும் சதா ஆனந்தத்தில் திளைக்கும் பச்சைக் குழந்தை மாதிரி.*
*
மனசு இருக்கணும் மனசு இருக்கணும் பச்ச புள்ளையாட்டம் ...*















No comments:
Post a Comment