*
நிம்மதி எங்கே இருக்கிறது...
*


*பெரியவர் சொன்ன ரகசியம்...*
*ஒரு மனிதன்....*
*எந்தக் குறையும் இல்லை அவனுக்கு...*
*ஆனாலும் மனசில் நிம்மதி இல்லை.*
*படுத்தால் தூக்கம் வரவில்லை...*
*சிரமப்பட்டான்...*
*அவன் மனைவி பரிதாபப்பட்டு ஒரு யோசனை சொன்னாள்.*
*பக்கத்துலே உள்ள காட்டுலே ஒர் ஆசிரமம் இருக்கு...*
*அங்கே ஒரு பெரியவர் இருக்கார்...*
*போய்ப் பாருங்கள்!"*
*ஆசிரமத்துக்குப் போனான்...*
*பெரியவரைப் பார்த்தான்.*
*ஐயா....*
*மனசுலே நிம்மதி இல்லே...*
*படுத்தா தூங்க முடியலே!"*
*அவர் நிமிர்ந்து பார்த்தார்...*
*தம்பி...*
*உன் நிலைமை எனக்குப் புரியுது...*
*இப்படி வந்து உட்கார்!"*
*பிறகு அவர் சொன்னார்:*
*உன் மனசுக்குச் சில ரகசியங்கள் தெரியக்கூடாது...*
*தெரிந்தா உன் நிம்மதி போயிடும்!*
*அது எப்படிங்க?*
*சொல்றேன்...*
*அது மட்டுமல்ல...*
*மனம் தேவையில்லாத சமயங்களிலே, தேவையில்லாத சுமைகளைச் சுமக்கறதும் இன்னொரு காரணம்!*
*ஐயா நீங்க சொல்றது எனக்கு புரியலே!*
*புரியவைக்கிறேன்....*
*அதற்கு முன் ஆசரமத்தில் விருந்து சாப்பிடு.*
*வயிறு நிறையச் சாப்பிட்டான்.*
*பெரியவர் அவனுக்கு சுகமான படுக்கையைக் காட்டி, இதில் படுத்துக்கொள் என்றார்.*
*படுத்துக் கொண்டான்...*
*பெரியவர் பக்கத்தில் உட்கார்ந்து கதை சொல்ல ஆரம்பித்தார்...*
*கதை இதுதான்:*
*ரயில் புறப்படப் போகிறது...*
*அவசர அவசரமாக ஒருவன் ஓடி வந்து ஏறுகிறான் அவன் தலையில் ஒரு மூட்டை...*
*ஒர் இடம் பிடித்து உட்கார்ந்தான்.*
*ரயில் புறப்பட்டது...*
*தலையில் சுமந்த வந்த மூட்டையை மட்டும் அவன் கிழே இறக்கி வைக்கவில்லை...*
*எதிரே இருந்தவர் கேட்கிறார்:*
*"ஏம்ப்பா! எதுக்கு அந்த மூட்டையைச் சுமந்துக்கிட்டு வாறே?*
*இறக்கி வையேன்.*
*அவன் சொல்கிறான்:*
*"வேணாங்க!*
*ரயில் என்னை மட்டும் சுமந்தா போதும்!*
*என் சுமையை நான் சுமந்துக்குவேன்!'*
*பெரியவர் கதையை முடித்தார்.*
*படுத்திருந்த நம்ம ஆசாமி சிரித்தான்.*
*ஏன் சிரிக்கிறே?*
*பைத்தியக்காரனா இருக்கானே...*
*ரயிலைவிட்டு இறங்கும் போது, மூட்டையைத் தூக்கிட்டு இறங்கினா போதாதா?*
*அது அவனுக்கு தெரிய வில்லையே*
*யார் அவன்? இயல்பாக கேட்டான்*
*நீதான்!"*
*என்ன சொல்றீங்க?*
*பெரியவர் சொன்னார்:*
*வாழ்க்கை என்பதும் ஒரு ரயில் பயணம் மாதிரிதான்...*
*பயணம் பூராவும் சுமந்து கொண்டே போகிறவர்கள் நிம்மதியாக வாழமுடியாது.*
*தேவைப்படுகிறது மட்டும் மனசில் வைத்துக்கொள்!*
*அவனுக்கு தனது குறை மெல்ல புரிய ஆரம்பித்தது... சுகமாக தூக்கம் வந்தது.*
*தூங்க ஆரம்பித்து விட்டான்...*
*கண் விழித்த போது எதிரே பெரியவர் நின்று கொண்டிருந்தார்.*
*"எழுந்திரு" என்றார் எழுந்தான்!*
*"அந்த தலையணையைத் தூக்கு!" என்றார்.*
*தூக்கினான்...*
*அடுத்த கணம்"ஆ"வென்று அலறினான்.*
*தலையணையின் அடியில் ஒரு நாகப்பாம்பு, சுருண்டு படுத்திருந்தது*
*ஐயா! என்ன இது?*
*உன் தலைக்கு வெகு அருகில் ஒரு பாம்பு...*
*அப்படி இருந்தும் நீ நிம்மதியாய் தூங்கி இருக்கிறாய்...!*
*அது ...*
*அது எனக்குத் தெரியாது...*
*பாம்பு பக்கத்தில் இருந்த ரகசியம் உன் மனசுக்குத் தெரியாது...*
*அதனால் நிம்மதியாகத் தூங்கியிருக்கிறாய்!*
*அவன் புறப்பட்டான்,, நன்றி பெரியவரே... நான் போய் வருகிறேன்!*
*நிம்மதி எங்கே இருக்கிறது என்பதை புரிந்து கொண்டாயா?*
*புரிந்து கொண்டேன்!*
*என் மனசுக்குள்ளேயே ஒளிந்து கொண்டிருக்கிறது.*
*அறிவின் வெளிச்சத்தால் அதைக் தேடிக் கண்டு பிடித்த விட்டேன் ஐயா.*











No comments:
Post a Comment