*Meditation தியானம்*
*ஊழ் வினை உருக்கி.. உள் ஒளி பெருக்குவதே தியான யோகம்*
*தியானம் என்பது மனத்தை அடக்கும் முறையல்ல; மனதினைப் புரிந்து கொள்ளுகின்ற பெருமுயற்சி!
உணர்ந்தால் வெற்றிபெறலாம்*
*என்ன கொடுப்பது என்பதை இறைவன் தீர்மானிக்கிறான்.*
*எப்போது என்பதை காலம் தீர்மானிக்கிறது.*
*எப்படி என்பதை இயற்கை தீர்மானிக்கிறது.*
*அதைப் பெறுவதற்கான தகுதியை மனிதன் மட்டுமே தீர்மானிக்கின்றான்*
*எல்லாவற்றையும் ஆழ்ந்து கவனிக்கப் பழகு.*
*அனைத்தையும் ஆழ்ந்து உற்றுநோக்கப் பழகு.*
*அனைத்தையும் ஆழ்ந்து வாசிக்கப் பழகு.*
*எல்லாவற்றையும் ஆழ்ந்து சிந்திக்கப் பழகு.*
*ஆழ்ந்த சிந்தனை அமைதியில் தான் பிறக்கின்றது. அமைதியை உள்முகமாக உன் உள்ளே தேடு. அது ஒரு ஆன்மீக பொக்கிஷம்! அங்கே அகவிருள் அகன்று அறிவொளி வீசட்டும். உன்னை நீயே விலகி இருந்து கவனி என்கிறார்கள் ஞானியர்.*
*சொல் என்றும் மொழி என்றும் பொருள் என்றும் இல்லை... சொல்லாத சொல்லுக்கு விலை ஏதும் இல்லை - கண்ணதாசன்.*
*அனைவரிடத்திலும் ஆத்ம சக்தி ஓங்கி ஒளிரட்டும் !*
*வாழ்க வையகம். வாழ்க வளமுடன்.*
*பயிற்சி உதவி:- கோகி, ரேடியோ மார்க்கோனி, புது தில்லி.*
*மீண்டும் அடுத்த பயிற்சி வகுப்பில் சந்திக்கலாம்...நன்றி*
No comments:
Post a Comment