T3-TRAIN THE TRAINER, TRAINING AND RECRUITMENT: Lesson-17, பாடம்-17 "ஆரா" என்கிற அடிப்படை காந்தப்புலம்..

Thursday, August 24, 2023

Lesson-17, பாடம்-17 "ஆரா" என்கிற அடிப்படை காந்தப்புலம்..

✅📚📚📚📚📚📚📚📚📚📚✅

*💐Meditation தியானம்💐

*📚👃Lesson-17, பாடம்-17👃📚*

*🧘‍♀️🧘‍♂️ஊழ் வினை உருக்கி.. உள் ஒளி பெருக்குவதே யோகம்🧘‍♂️🧘‍♀️*

*📚அஷ்டமா சக்தி அதிசயங்களை தொடர்ந்து இறுதி பயிற்சி வகுப்பில் பெறலாம்*


*📚இன்றைய பயிற்சி வகுப்பில்.. "ஆரா" என்கிற அடிப்படை காந்தப்புலம்.. அது சார்ந்த சக்திகளை எப்படி பயன்படுத்திக்கொள்லாம்...*

*📚காந்தப் புலம் (magnetic field) என்பது மின்னோட்டத்தின் அல்லது காந்தப் பொருள் ஒன்றின் காந்த விளைவாகும்.* 

*📚 "ஆரா" அனைத்து ஜீவராசிகளிடமும் பொருட்களிலும் உள்ள ஒன்றுதான் ஆரா.  இது நம் உடலை/பொருளை சுற்றி ஒளி கவசம் போல் தோன்றும்.  ‘ஆரா’. இதனை நாம் கண்களால் பார்க்கவும் முடியும். உணரவும் முடியும். விஞ்ஞானத்தில் இது நேர்த்திசை, எதிர்த்திசை இரண்டையும் கொண்டுள்ளதாக கூறப்படுகிறது. ஞான மார்க்கத்தில் உள்ளவர்கள் அஷ்ட சக்கரத்தின் வெளிப்பாடு என்றும், சூட்சம சக்தியின் வெளிப்பாடு என்றும் கூறுகின்றனர். இந்த சக்தியானது நம் உடம்பிற்கு உள்ளேயும், வெளியேயும், பொருள், வெற்றிடங்களிலும் ஊடுருவி செல்லும் தன்மையை கொண்டது. நம் மூளையில் ஏற்படும் மாற்றங்களை வைத்து நம்மைச் சுற்றியுள்ள ஆராவின் தன்மையும் நம்மால் மாற்றி அமைக்க முடியும். நம்முடைய உடம்பு முழுவதும் நம் உள் உறுப்புகளின் துணைகொண்டு இந்த ஆரா சக்தி செயல்படுவதாக நம் ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.*

*📚சித்தர்களின் ஆரா சக்தியானது பல ஆயிரம் தூரம் பயணிக்க கூடிய சக்தியாக இருக்கின்றது. இதனால் தான் சித்தர்கள் முன்கூட்டியே பல விஷயங்களை அறிந்து கொள்ளும் சக்தியை பெற்றுள்ளனர்.*

*📚மனிதனின் உடம்பில் ஆரா சக்தியானது அவனது கண்கள், நாடி நரம்புகளில் முனைப்பகுதியாகிய உள்ளங்கை மற்றும் உள்ளங்கால்களில் இருந்து வெளியாகின்றது. இந்த ஆராய்ச்சியை கொண்டு நம்மால் நோய்களை குணமாக்க முடியும்.*

*📚பயிற்சிகள் மூலம் ஆரா சக்தியை குறையாமல் வைத்திருப்பதன் மூலம் நோய்கள் நெருங்காது என்று சூட்சம சக்தி ஆய்வாளர்கள் கூறுகின்றனர். மேலும் கேன்சர் போன்ற கடுமையான நோய்களை எளிமையாக குணமாக்கலாம் என்று கூறுகின்றனர்.*

*📚உடலில் உள்ள ஆரா சக்தியின் அளவை கண்டறிய, 1.)பெண்டுலம் என்ற கருவி, 2). "ஔரா ஸ்கேனர்" (Aura scanner), 3).கிரிலியின் போட்டோ கிராபி, 4).ஆன்ராய்டு போன்களில் ஔரா போட்டொ கிராபி அப்.. போன்ற கருவி முறைகளைப்பயன்படித்தி அளவிடலாம்.*

*📚நம் உடலில் இந்த "ஆரா" ஆற்றலின் வலிமையை பொறுத்தே நோய் தாக்கம்? மன குழப்பம்? கவலை? உற்சாகம்? ஆனந்தம்? மனவலிமை? போன்ற எண்ணகளின் வெளிப்பாடாக இருக்கும்.*

*📚இந்த "ஆரா" என்ற ஒளியுடல் ஆற்றலை கொண்டு ஓர் அரண் (SHIELD) என்ற ஒன்றை உருவாக்கி அதை கொண்டு நம்மை தீய எண்ணங்கள், துஷ்ட சக்திகள் போன்றவற்றில் இருந்து, நம் வீட்டை, ஊரை, தேசத்தை காத்துக்கொள்ள பயன்படுத்தினார்கள்...*

*📚பசு என்பது தன் உடலில் இருந்து வெளிபடுத்தும் "ஆராவின்" அளவு மிக அதிகம், அதனால் தான் நம் புதுவீடு கட்டி முதலில் பசுவை வீட்டினுள் அழைத்து வருகிறோம். பசுவின் சாணம் கொண்டு பிள்ளையார் பிடித்து பூஜிக்கிறோம். எந்த வீட்டில் பசுமாடம் சுத்தமாக வைத்து பசுக்கள் யாவும் பூஜிக்கபடுகிறதோ அந்த இல்லம் ஓர் ஐஸ்வர்யம் நிறைந்த வீடாகவே இருக்கும்.*

*📚ஆரா சக்தியானது நமது உடல், மனம் மற்றும் உணர்வுகளைப் பாதுப்பாக வைத்துக்கொள்ளப் பயன்படுகிறது. ஆரா சக்தியானது இப்பிரபஞ்சத்தில் உள்ள அதியுயர் சக்திகளை ஈர்க்கும் வல்லமை உடையது. ஒருவர் தன் ஆராவின் பலத்தை அதிகப்படுத்துவதன் மூலம் மற்றவரின் ஆராவின் தாக்குதலில் இருந்து தப்பித்துக் கொள்ளலாம்.*

*📚முறையாக பயிற்ச்சிப்பெற்று ஆராவை கட்டுப்படுத்த தெரிந்தவர்கள் அதன் மூலம் மற்றவர்களின் நோய்களை குணப்படுத்துகிறார்கள். ஆராவை அதிகப்படுத்துவதால் அவரின் அழகு கூடும் முகமும் எந்த வித குழப்பமும் இல்லாமல் தெளிவாக காணப்படும். நம்முடைய ஆராவானது நமது உடலைச்சுற்றி ஒரு பாதுகாப்பு கவசம்போல் இருக்கிறது. மேலும் நமது ராஜ உறுப்புகளான கணையம், சிறுநீரகம், மூளை, இதயம் ஆகியவற்றையும் சேர்த்து மனநல உணர்வுகளையும் நேர்விசை சக்தியாக தூண்டி நமது உடலைப் பாதுகாக்கிறது.*

*📚ஆராவை சுத்தம் செய்தல் மற்றும் பலமிக்கதாக மாற்றும் முறை: எண்ணெய் மற்றும் மூலிகைக் குளியல்கள் உங்கள் ஆராவை சுத்தம் செய்ய சிறந்த வழிமுறையாகும். கேரளாவில் மூலிகை குளியல் என்பது பிரசித்து பெற்ற ஒன்றாகும். எண்ணெய் மூலிகை குளியலை செய்ய இயலாதவர்கள், நீங்கள் குளிக்கும் தண்ணீரில் சிறிது உப்பு, பன்னீர், ரோஜா இதழ்கள் இதனைக் கலந்து குளிக்கலாம்.*

*📚முடிந்தவரை எதிர்மறை எண்ணங்களை வளர்த்துக்கொள்வதை நிறுத்திக் கொண்டு நேர்மறை எண்ணங்களை வளர்த்துக் கொள்ளுங்கள். அதுவே உங்கள் ஆராவை பலமிக்கதாக வைத்துக்கொள்ளும்.*

*📚ஸ்மட்ஜிங் என்பது புனித மூலிகைகள் எரிக்கப்பட்டு, அதிலிருந்து வரும் புகையை பயன்படுத்துவதன் மூலம், மற்றும் ஹோம புகை, சாம்பிராணி புகை, ஊதுவத்தி புகை போன்ற புகாகளின் மூலமும் உங்கள் ஆரா அல்லது ஆற்றல் புலம் சுத்தம் ஆகும்.*

*📚நாம் எதை வேண்டுகிறோமோ, அதை நம்பிக்கையுடன், ஆத்மார்த்தமாக, உணர்வுப்பூர்வமாக கேட்க வேண்டும். அப்படி கேட்டால், நிச்சயம் கிடைக்கும்.*

*📚மேற்கண்ட மேலும் பல உதாரணங்கள் விவரங்களை சித்த வித்தை பயிற்சியில் நாம் உணரமுடியும்.*

*📚பயிற்சி உதாரணம்:-*

*🧘‍♂️வெகு தூரத்தில் இருக்கும் எந்த உயிரினமும் நினைக்கும், எண்ணங்களை எளிமையாக புரிந்துகொள்ளமுடியும்...*

*📚உதாரணம்:- ஆடியோ, வீடியோ இணைப்பில் காண்க..*

🎤உதாரணம்... குரல் பதிவு👇

*அனைவரிடமும் ஆத்ம சக்தி ஓங்கி ஒளிரட்டும்... வாழ்க வையகம். வாழ்க வளமுடன்.*

*பயிற்சி உதவி:- கோகி, ரேடியோ மார்க்கோனி, புது தில்லி.*
மீண்டும் அடுத்த பயிற்சி வகுப்பில் சந்திக்கலாம்... நன்றி🙏👍
👇👇👇👇👇👇👇👇👇👇👇👇

No comments:

Post a Comment