T3-TRAIN THE TRAINER, TRAINING AND RECRUITMENT: *‘எப்படி தியானத்தில் ஈடுபடுவது...???’*

Thursday, August 24, 2023

*‘எப்படி தியானத்தில் ஈடுபடுவது...???’*

  🧘‍♂️🧘‍♀️🧘‍♂️🧘‍♀️🧘‍♂️🧘‍♀️🧘‍♂️🧘♀️🧘‍♂️🧘‍♀️🧘‍♂️


*🧘🏻‍♂️  தியானம்? 🧘🏻‍♂️*

*🧘🏻‍♀️ ஜென் குருவிடம் ஒருவன் வந்து..*

*‘எப்படி தியானத்தில் ஈடுபடுவது...???’*

*என்று கேட்டான்* 

*‘என்னைப் பார்த்துக் கொண்டிரு..*

*தியானம் உனக்குக் கைவரும்’ என்றார் ஜென் குரு*

*அவனும் சம்மதித்தான்*

*காலையில் குரு எழுந்தார்* 

*குளித்தார்*

*பகல் முழுவதும் தோட்ட வேலையில் ஈடுபட்டார்* 

*உணவு வேளையில் உண்டார்*

*ஆனால்*

*வழிபாடு, பிரார்த்தனை, தியானித்தல், படித்தல் என்றெல்லாம் செய்யவில்லை* 

*இதில் மனம் சலித்த சீடன்*

*‘எப்போது நான் தியானம் கற்பது...???’ என்றான்* 

*‘நான் குழி வெட்டியதும் தியானம்தான்* 

*தோட்டம் போட்டதும் தியானம்தான்*

*உணவு உண்டதும் தியானம்தான்*

*எனது வாழ்வே தியானம்தான்*

*எனது வாழ்வில், தியானம் என்ற ஒன்று தனியாக இல்லை’*

*என்று சிரித்தபடி சொன்னார் ஜென் குரு*

*மாசற்ற மனம் உள்ளவர் விழி மூடி அமர்ந்திருக்க அவசியமில்லை* 

*நாம் அனைவரும் ஜென் குரு அல்ல* 

*ஆயிரம் எண்ணங்கள் அலையடிக்கும் மனது நம்முடையது*

*ஆசை, அச்சம், கோபம், காமம், வெறுப்பு, பகை என்ற சிலந்திவலைப் பின்னலில் சிக்கித் தவிப்பவர்கள்*

*நெருப்புக்கும் வெள்ளத்துக்கும் நடுவில் நிற்பதுபோல்*

*நல்ல எண்ணங்களும், தீய விருப்பங்களுக்கும் இடையில் நடப்பதே வாழ்க்கை*

*நல்லதையே நாடு’ என்று அறிவு சொல்கிறது*

*எல்லாவற்றுக்கும் ஆசைப்படு என்று மனக் குரங்கு தினமும் பாடம் நடத்துகிறது* 

*இந்தக குழப்பத்திலிருந்து எப்படி எப்போது நமக்கு விடுதலை என்பதுதான் கேள்வி....???*

*நாம் ஒன்று செய்வோம்*

*காலை-மாலை இரு வேளையும் தனிமையில் கொஞ்ச நேரம் கண்மூடி மெளனமாக அமர்ந்து, நம்மை நாம் உள்முகமாக யோசிப்போம்* 

*நமது பலம்-பலவீனம், நிறை-குறைகளை நெஞ்சில் நிறுத்தி அன்றாடம் அலசுவோம்* 

*தவறுகளைத் தவிர்க்க முடிவெடுப்போம்*

*பகையை வேரறுத்து, அன்பை விதைத்து விருட்சமாக வளர்க்க முயலுவோம்* 

*ஒரே பிறவியில் புத்தனாக முடியாது என்கிறது பெளத்தம்*

*ஒரே நாளில் நாம் அனைவரும் முனிவர்களாகிவிட முடியாது*

*கொஞ்சம் கொஞ்சமாக மனதில் படிந்திருக்கும் அழுக்கை அகற்ற உள்முகத் தேடலில் ஈடுபடுவோம்* 

*எத்தனை நாள்தான் வெளியே தேடி, வாழ்வை வீணாக்குவது....???* 

*விழிப்பு உணர்வு இல்லாத விலங்குகளா நாம்...???*

*நமக்குள்ளே நம்மை தேடுவோம்*

*தினமும் இரவு உறங்குவதற்கு முன்பு*

*தினமும் பத்து நிமிடமேனும் கண்மூடி தியானிப்போம்*

*இப்படி சிறிய தியான பழக்கம் தான் வளர்ந்து முதிர்ந்து பிறகு நாள் முழுதும் எல்லா செயல்களிலும் வியாபித்திருக்கும் தியானமாக மாறும்.*

*துயர் களைந்து நிறைவளிக்கும் வாழ்வை வாழ்ந்து பார்ப்போம்..🧘🏻‍♀️*
🧘‍♂️🧘‍♀️🧘‍♂️🧘‍♀️🧘‍♂️🧘‍♀️🧘‍♂️🧘♀️🧘‍♂️🧘‍♀️🧘‍♂️

No comments:

Post a Comment