T3-TRAIN THE TRAINER, TRAINING AND RECRUITMENT: சுழுமுனை நாடி திறப்பு என்பது..

Thursday, August 24, 2023

சுழுமுனை நாடி திறப்பு என்பது..

 📚📚📚📚📚📚📚📚📚📚

*📚சுழுமுனை நாடி திறப்பு என்பது..*📚

*சிவலிங்கம் என்பது நம்முடைய ஆதி சிவ நெறியில்....*

*ஆகமத்தை வகுத்தது சிவன்..*

*ஆகம முறைப்படி உயிர்களின் தலையே "கருவரை.."*

அதிலும் *நெற்றியே* சிவம் இருக்கும் வெட்டவெளி...

நாம் சுவாசிக்கும் காற்றானது *மூக்கு* வழியே நுழைந்து *சுழிமுனைக்குச்* சென்று, 

அங்கிருந்து *கீழ்நோக்கி நுரையீரலில்* வடிகட்டி(பில்ட்ராகி,) 

*மூலாதாரம்* சென்று அங்கிருந்து, 

*இதயம்* வந்து மீண்டும், 

*சுழிமுனை* வழியாக வெளியேறுகிறது.

இந்த காற்றானது *உள்ளும், புறமும் சுழிமுனை* வழியாக செல்வதன் மூலம், 

*சுழிமுனையிலிருக்கும் ஆன்மாவானது சுழல்கிறது..*

*( பூமி மற்றும் பிற கோள்களைப் போலவே)*

*நம்மையும் அறியாமல் மூச்சை இழுத்து சுவாசித்து ஆன்மாவை இயக்கும் அந்த "சக்தியே" கடவுள்.*

சீவனை இயக்குவதால் *சிவன்* என சித்தர்கள் பெயர் சூட்டினர்.

இந்தசுழி முனையை *சிவம்* எனவும், 

அதற்கு கீழ்பகுதி *லிங்கமெனவும்*

 லிங்கம் உள்ள அடிப் பகுதி *ஆவுடையார்* எனவும், 

*சித்தர்கள் ஆராய்ந்து கூறினர்.*

அதாவது *கீழ் தாடை* மற்றும் *மேல்  தாடை* ஆவுடையார் என்றும்.

தொண்டைக் குழியில் உள்ளே உள்ள *உள் நாக்கு* ஆவுடையாரில் பதிந்திருக்கும் *லிங்க பாகம்.*

*இதை வாய்க்குள் நம்மால் பார்க்க முடியும்.*

*அதே நாக்கானது மேல் நோக்கியும் அதே அளவு குவிந்திருக்கும்.* 

அதுவே அன்னாக்கு. *(அண்ணாமலை)* நம்மால் வெளியில் அதைக் காண முடியாது. 

அதைத்தான்  லிங்கமாக  *(மஹாதேவராக)*  ஆவுடையாரின் மீது காண்கிறோம்.
           
அதன் மீதினிலிருந்து இயக்கும் சுத்த வெளியே *நெற்றிப்பொட்டினுள் காற்று* உள் செல்லும், 

மூக்கின் கடைசிபகுதியும் *தொண்டைக்குழிக்கு மேல்* சேரும் இடமே *சுத்த சிவம்.*

ஆகமமும் இதையே தெளிவுபடுத்துகிறது..

*சித்தர்களும் ஆராய்ந்து உருவாக்கியதே சிவன் உறையும் லிங்கத் திருமேனி..*
           இதனாலேயேதான் *கருத்தையும், சிந்தையையும், தியானத்தையும் நெற்றிப்பொட்டு* எனப்படும் *சுழிமுனையில்* வை என சான்றோர்கள் கூறினர்.

*எண்ணாயிரத்தாண்டு யோகம் இருக்கினும்*
*கண்ணாணார் அமுதினைக* *கண்டறிவாரில்லை*
*உண்ணாடிக்குள்ளே* *ஒளியுற நோக்கினால்*
*கண்ணாடிபோலக் கலந்து நின்றானே...*

*நாட்டமும் இரண்டும் நடு மூக்கினில் வைத்திடில்*
*வாட்டமும் இல்லை மனைக்கு அழிவில்லை*
*ஓட்டமும் இல்லை* *உணர்வில்லை தானில்லை*
*தேட்டமும் இல்லை சிவனவனாமே..*
                            -        *திருமூலர்...*

*இனியேனும் லிங்கத் திருமேனியை அவதூறாகப் பேசாதீர்...*

*ஓம் நமசிவாய*🙏🙏🙏🙏🙏🙏
📚📚📚📚📚📚📚📚📚📚

No comments:

Post a Comment