*உயிர் மூச்சை அடக்கி வாசியில் வாழும் விலங்குகளும் பறவைகளும் ஒரு அதிசயம்.. அவைகளுக்கு தெரிந்தது கூட மனிதருக்கு தெரியாத.. அல்லது முயற்சி செய்யாத மனிதன்...*
*மனித மிருக வர்ணனை*
*மிருகங்கள் என்று சொல்லி வருபவை கட்கு அனுசரணை சக்தி அதாவது சொன்னபடி கேட்கும் பண்பு உண்டு.*
*எனவே அவை விசேஷ ஞானிகளாகும்.*
*மனிதன் இத்தனை காலங்களாக மிருகங்களோடு பழகியும், அவற்றின் மொழிகளைப் புரிந்து கொள்ள முடியவில்லை.*
*ஆனால் அவை மனிதனுடைய மொழியை எவ்வளவோ இலகுவாக புரிந்து கொள்ளவும் அதை அனுசரித்து நடக்கவும் செய்கின்றன.*
*அதற்குள்ள புத்தி மிருகங்களுக்கு உண்டு. அது மட்டுமல்ல,*
*கோடை காலத்தில் குளங்களில் தண்ணீர் வற்றும் போது மீன்கள் மண்ணின் அடியில் தலை கீழாகத் தாழ்ந்து போகின்றன.*
*முடிவில் தண்ணீர் சிறிதும் இல்லாமல் போகும் போது சிரசில் உயிரை ஒடுக்கிக் கொண்டு இருக்கின்றன. பார்வைக்கு சவம் போல் தென்படுகின்றன.*
*ஒன்றிரண்டு மாதங்களுக்குப் பிறகு எப்போதாவது மழை பெய்து தண்ணீர் வந்தால் அவை மேலே வந்து துள்ளி விளையாடுவதை காணலாம்.*
*அதுபோலவே பூமிக்கடியில் கிணறுகள் எவையேனும் தோண்டும் போது, நாலு பக்கமும் மண் கொண்டு நெருங்கி இருக்கும் ஒரு சிறு வெளியில், ஒரு தவளை இருப்பதை காணலாம்.*
*காற்றும் தண்ணீரும் ஆகாரமும் கிடைக்காத அந்த இடத்தில் இந்தப் பிராணி எப்படி வாழ்கிறது ?*
*யோகிகள் மண்ணுக் கடியில் வெகு நாள் இருக்கிற கதைகளையும் செய்திகளையும் கேட்டதுண்டு அல்லவா !*
*இப்பிராணிகளும் அதுபோல தவம் செய்கிறவர்களே !*
*சகல படைப்புகளிலும் மேலானவர்கள் என்றும் புத்தி உள்ளவர்கள் என்றும் அபிமானித்து வருகிற மனித மிருகங்கள் , இந்தப் பிராணிகளை விட எவ்வளவோ கீழ் நிலைமை உடையவர்களாகவே இருக்கிறார்கள்.*
*இந்த பிராணிகள் ஞானிகளே !*
*ஜெகத்ஜோதி சுவாமி சிவானந்த பரமஹம்ஸரின் தத்துவ சொற்பொழிவுச் சுருக்கம்.*
No comments:
Post a Comment