T3-TRAIN THE TRAINER, TRAINING AND RECRUITMENT: ஆரோக்கிய பொக்கிஷ பானை

Thursday, August 24, 2023

ஆரோக்கிய பொக்கிஷ பானை

 📚🧘‍♂️🧘‍♀️🧘‍♂️🧘‍♀️🧘‍♂️🧘‍♀️🧘‍♂️🧘‍♀️🧘‍♂️🧘‍♀️📚


*🎁ஆரோக்கிய பொக்கிஷ பானை🎁*

*இந்த பூமியில் பிறக்கும் ஒவ்வொரு மனிதனுக்கும் கடவுள் ஒரு பானையை கொடுத்து அனுப்புகிறார்...*

*அந்த பானை முழுவதும் நாம் நிறைவோடு வாழ்வதற்கு தேவையான எல்லா பொக்கிஷங்களும்  நிறைந்திருக்கும்!*

*உணவு, உடை, இருப்பிடம், அப்பா, அம்மா, மனைவி, குழந்தைகள், நண்பர்கள், உறவுகள், கல்வி, கருணை,  அமைதி, நிம்மதி, சந்தோஷம்,  நல்லெண்ணம், அன்பு, ஆரோக்கியம், பக்தி, தியாகம் இதுபோன்ற நிறைய பொக்கிஷங்கள் அதில் இருக்கும்,*

*ஆனால் எந்த பொக்கிஷத்தையும் நாம் முழுமையாக அனுபவிப்பது இல்லை,* 

*காரணம் நம் பார்வையெல்லாம் அடுத்தவன் பானைமீது தான் இருக்கிறது!*

*ஒரு சிலர் செம்பு பானையோடு செல்வார்கள் அதைப்பார்த்து ஏங்குவோம்!*

*ஒரு சிலர் வெள்ளிப்பானையுடன் செல்வார்கள் அதைப்பார்த்து ஏங்குவோம்,*

*ஒரு சிலர் தங்கப்பானையோடு செல்வார்கள் அதைப்பார்த்தும்  ஏங்குவோம்!*

*எப்படியாவது அந்த ஆடம்பரமான பானையை அடைந்துவிடவேண்டும் என்று போராடுவார்கள், ஆனால் இவர்களுக்கு தெரிவதில்லை மண்பானையில் இருக்கும் எந்த பொக்கிஷமும் அதில் முழுமையாய் இல்லையென்று!*

*அருகில் சென்று உங்களுக்கு மட்டும் எப்படி தங்கப்பானை கிடைத்தது என்று கேட்க, எனக்கும் மண்பானை தான் கொடுத்தார்,* 

*நான் தான் நிறைய சம்பாதித்து இந்த பானையை வாங்கினேன் என்றதும், ஓடி ஓடி சம்பாதித்து தங்கப்பானை வாங்கிவிடுவார்கள்,*

*ஆனால் உள்ளே எதையும் வைக்கமுடியாது, வெளியுலகுக்கு மட்டும் தங்கப்பானை கவுரவமாகவும்  பெருமையாக இருக்கும்!*

*இந்த பானை கிடைத்த சந்தோஷத்தில் மண்பானையை தூக்கி எறிந்துவிட்டு அதில் இருந்த பொக்கிஷங்களை எடுத்து தங்கப்பானையில் திணிப்பார்கள்..*

*சில பொருத்துக்கொள்ளும் சில சிதறிவிடும்,* 

*சிதறியவற்றை பற்றி கவலைப்படாமல் தங்கப்பானையோடு வாழ்வதே சந்தோஷம் என்று வாழ்வார்கள்..* 

*காலம் மாற மாற  அடைத்து வைத்த பொக்கிஷங்கள் எல்லாம்..*

*தங்களது இயல்பு நிலையை இழந்து அங்கே இருக்க முடியாமல் பானையை சிதைத்துக்கொண்டு வெளியேறிவிடும்!* 

*இறுதிகாலத்தில் சிதைந்த பானையில் இருக்கவும் முடியாமல், பொக்கிஷங்களையும் இழந்துவிட்டு, தெருத்தெருவாக அலைவோம்,*

*நம்மை தாக்குவதற்காக விதவிதமான எதிரிகள் நோய்கள் என்ற பெயரில் கொடூரமாக தெருக்களில் உட்கார்ந்து இருப்பார்கள்!*

*தெருவை கடப்பதற்குள் ஆளுக்கொரு பக்கம் கடித்து குதற ரத்தகாயங்களோடு தப்பித்து ஓடிவருவோம்,*

*ஆரோக்கியம் என்ற பொக்கிஷத்தின் அருமை அப்போதுதான் தெரியும்!*

*தங்கப்பானைக்குள் அடங்காததால் வெளியே வீசியெறிந்தது அப்போதுதான் நினைவுக்கு வரும்!*

*ரத்த காயங்களுக்கு மருந்துபோட உறவுகளையும் நட்பையும் தேடுவோம்!*

*பானையில் இடமில்லை என்று பொய்யாக விரட்டியடித்தது தவறு என்று இப்போது புரியவரும்,*

*யாருமற்ற நிலையில் நோய்களிடமிருந்து காத்துக்கொள்ள அந்த மண்பானையாவது கிடைக்காதா என்று தேடி அலைவோம் ...*

*ஏதோ ஒரு தெருவோரத்தில் உடைந்த நிலையில் சாய்ந்தபடி அந்த மண்பானைகண்ணில் தெரியும்,*

*ஆசை ஆசையாய் ஓடிச்சென்று பார்ப்போம், அம்மா அப்பா என்ற பொக்கிஷங்கள் இறந்துபோயிருக்கும்,*

*மனைவி குழந்தைகள் உறவுகள் நட்புகள் அமைதி நிம்மதி சந்தோஷம் என்ற பொக்கிஷங்கள் எல்லாம் சிதைந்துபோயிருக்கும்!*

*ஆரோக்கியம் எனும் பொக்கிஷம் உயிருக்கு போராடிக்கொண்டு இருக்கும்!*

*அன்பு கருணை தியாகம் பக்தி என்ற  பொக்கிஷங்கள் மட்டும் எந்தவித சேதமும் இன்றி எந்தவித எதிர்ப்பார்ப்புமின்றி  காயம் பட்டவர்களுக்கு மருந்து தடவிக்கொண்டு இருக்கும்!*

*மண்பானையின் முக்கியத்துவத்தை உணர்ந்து, நல்லமுறையில்  வாழவேண்டும் என்று நினைக்கும் போது...*

*Excuse me...* 

*உங்களுக்கு கொடுத்த time முடிஞ்சிடுச்சி,*

*அந்த பானையையும் பொக்கிஷங்களையும் திருப்பி தரமுடியுமா !? என்று கேட்டபடி ஒருவர் நிற்பார்!*

*யார் நீங்க?? என்றால் கடவுள் என்று சொல்லியபடி உடைந்த பானையையும் சிதைந்த பொக்கிஷங்களையும் தூக்கிச்செல்வார்!*

*ஏக்கத்தோடு அவரையே பார்த்து நிற்க, பின்புறத்தில் ஏதோ கரடுமுரடான சத்தங்கள் கேட்டு திரும்பி பார்த்தால் நம்மை தேடியலைந்த நோய்களெல்லாம  கொடூரமானமுகத்தோடு ரத்தவெறியுடன் ஓடிவரும்!*

*அப்புறமென்ன கண்ணிமைக்கும் நேரத்தில் கதம் கதம்!! முடிந்தது*

*கடவுள் தந்த அந்த ஆரோக்கிய பானையையும், அதற்குள் இருக்கும் பொக்கிஷங்களையும் எங்கு வைத்திருக்கிறீர்கள் என்று சரிபார்த்துக் கொள்ளுங்கள்.*

*படைத்தவன் பானைதேடி எப்போது வேண்டுமானாலும் வரலாம்.*✍🏼
📚🧘‍♀️🧘‍♂️🧘‍♀️🧘‍♂️🧘‍♀️🧘‍♂️🧘‍♀️🧘‍♂️🧘‍♀️🧘‍♂️📚

No comments:

Post a Comment