T3-TRAIN THE TRAINER, TRAINING AND RECRUITMENT: Lesson-14, பாடம்-14 நமக்குள் இருக்கும் இந்த ஆத்ம சக்தியை புரிந்துகொண்டால் போதும்..

Thursday, August 24, 2023

Lesson-14, பாடம்-14 நமக்குள் இருக்கும் இந்த ஆத்ம சக்தியை புரிந்துகொண்டால் போதும்..

 ✅📚📚📚📚📚📚📚📚📚📚✅

*💐Meditation தியானம்💐*
*📚👃Lesson-14, பாடம்-14👃📚*

*🧘‍♀️🧘‍♂️ஊழ் வினை உருக்கி.. உள் ஒளி பெருக்குவதே யோகம்🧘‍♂️🧘‍♀️*
*முந்தைய வகுப்பு பயிற்சியின் தொடர்ச்சி:-*😷🔔🔔🔔🔔

*அடுத்த வகுப்பு பயிற்சியில், நம்மிடம் இருக்கும் ஆற்றல்/சக்தி என்ன? அது எப்படிப்பட்ட சக்தி, என்பதை எப்படி என்று சிறு சிறு சோதனைகள் செய்து தெரிந்துகொள்வதெப்படி?* 

📚🧘‍♀️🧘‍♂️🧘‍♀️🧘‍♂️🧘‍♀️🧘‍♂️🧘‍♀️🧘‍♂️🧘‍♀️🧘‍♂️📚

*📚நான் பெற்ற செல்வம் நலமான செல்வம்..📚*

 *🎁எனக்குள்ளே ஏராளமான ஆத்ம சக்தியை நான் எப்படி உணர்ந்துகொண்டேன்..?*

*🎁அந்த ஆத்ம சக்தியை அதிகரிக்கவும், சேமிக்கவும் செய்வதோடு அந்த ஆற்றல்களை பயன்படுத்தவும் நான் எப்படி கற்றுக்கொண்டேன்..*

*✅என்னுடைய ஒவ்வொரு செயலையும் நான் கவனிக்க தொடங்கினேன்..*

*✅என்னுடைய  மனதில் ஓடும் ஒவ்வொரு எண்ணத்தையும் கூர்ந்து கவனித்து வந்தேன்*

*✅நடக்கும் போதும்*
*✅பேசும் போதும்*
*✅குளிக்கும் போதும்*
*✅சாப்பிடும் போதும்*

*✅என்னுடைய ஒவ்வொரு  அசைவையும் கவனித்தேன்..*

*✅ஒவ்வொன்றும் கவனிப்பதற்கான ஒரு சந்தர்ப்பமாக அமைத்துக்கொண்டேன்...*

*✅கடந்து போனதை மறந்து விட்டு, இப்போது நிகழ்த்து கொண்டிருப்பதை அனுபவிக்க கற்றுக்கொண்டேன்.*

*✅எதையும் உன்னிப்பாக கவனித்திருக்கும் போது தெளிவு பிறக்கிறது..*

*✅கவனிக்கும் போது என்னுடைய அவசர கதி  நிதானமாகிறது..* 

*✅எண்ணங்கள் மெலிந்து போய் வலுவிழந்து விடுவதை உணரமுடிந்தது..*

*✅உன் மனம் பளிச்சென்று கண்ணாடி போல் பிரதி பலிக்கிறது.. தெரிகிறது...* 

*✅எல்லாவற்றிலும் தெளிவு உதிக்கும்போது  ஆனந்தம் மலர்கிறது...*👍

*✅ஆத்மா விழித்திருப்பதே (விழிப்புணர்வே Awareness) வாழ்வு என்று தெரிந்து விடுகிறது..*

*✅ஆத்ம விழிப்பை அழித்து விட முடியாது என்பதால் இனி அதற்கு இறப்பில்லை என்பது தெரிந்து விடுகிறது../ புரிகிறது..* 

*✅இறப்பை நான் அணுகும்போது  அதையும் என்னால் கவனிக்க முடியும்*

*✅இறப்பை கவனித்துக் கொண்டே இருந்தாலும்.. எனது கவனிப்பது  இறப்பதில்லை..* 

*✅என்னுடைய கவனிப்பு நிலைத்திருக்கும் பிரபஞ்ச  பிரக்ஞையாகிப் போகும்...* 

*✅அகம் பிரம்மாஸ்மி*
*✅நானே பிரபஞ்சப் பிரக்ஞை* 
*✅நானே சத்தியம்*

*✅விழிப்படைந்த எனது மனம் உள் நோக்கி நகருகிறது..* 

*✅விழிப்படையாத மனது வெளியே இருப்பதை  நோக்கிப் பாய்கிறது...*

*✅இப்போது நிஜம் எனக்கு புரிகிறது... அது எனக்கும் எனது ஆத்மாவிர்க்கும் மிகப்பெரிய சக்தியை தருகிறது...*

*✅இந்த ஆத்ம சக்தி என்னிடம் நிறைந்திருக்கும் போது.. சதா ஆனந்தம்.. நிறைந்திருப்பதை உணருகிறேன்...*

*🧘‍♀️நமக்குள் இருக்கும் இந்த ஆத்ம சக்தியை புரிந்துகொண்டால் போதும்.. நாம் நினைப்பதும்.. நினைத்துப் பார்க்காதவைகளும் கூட நமது தேவைக்கும் அதிகமானதை நமக்கு வாரிவழங்கும்...*

🎤உதாரணம்... குரல் பதிவு👇

*வாழ்க வையகம். வாழ்க வளமுடன்.*

*பயிற்சி உதவி:- கோகி, ரேடியோ மார்க்கோனி, புது தில்லி.*
மீண்டும் அடுத்த பயிற்சி வகுப்பில் சந்திக்கலாம்... நன்றி🙏👍
👇👇👇👇👇👇👇👇👇👇👇👇

No comments:

Post a Comment