T3-TRAIN THE TRAINER, TRAINING AND RECRUITMENT: எளிய கதை:- பக்தா... பொருட்களை சேர்த்து வைக்காதே; அன்னதானம் செய்...’

Thursday, August 24, 2023

எளிய கதை:- பக்தா... பொருட்களை சேர்த்து வைக்காதே; அன்னதானம் செய்...’

 🌹🌺 ' *பக்தா துளசி... பொருட்களை சேர்த்து வைக்காதே; அன்னதானம் செய்...’ என்று சொல்லி மறைந்த ஸ்ரீ ராமன் - விளக்கும் எளிய கதை* 🌹🌺

 
🌺 மாகவி என பெயர் பெற்றவர் துளசிதாசர்; ஸ்ரீராமர் பெருமையை பரவச் செய்யவே, தான் பிறந்ததாக நினைத்தவர். அவர் செய்யும் தெய்வத் தொண்டுகளுக்காக, அடியார்கள் அள்ளிக் கொடுத்தனர்.

🌺இதனால், ஏராளமான சாதுக்கள் அவர் இல்லத்திற்கு வருவதும், அங்கேயே தங்குவதுமாக இருந்தனர்.

🌺அந்த சாதுக்களில், நான்கு பேர் மட்டும், அங்கு குவிந்திருக்கும் செல்வத்தை எப்படியாவது திருடிச் சென்று விட வேண்டும் என, திட்டம் தீட்டினர்.

🌺அன்று அமாவாசை இரவு; எல்லாரும் ஆழ்ந்த நித்திரையில் இருந்தனர். இதுதான் சமயம் என்று, ஏராளமான செல்வங்களை அள்ளி, மூட்டை கட்டி, மடத்தின் பின் வாசல் வழியாக வெளியேறினர்,

🌺திருடர்கள். கள்ளன் பெரிதா, காப்பான் பெரிதா என்பர். அதைப்போன்று கள்ளர்கள் திட்டம் தீட்டி களவாடி போனாலும், காவலர் இருவர் அவர்களை பிடித்து நன்றாக அடித்து, காவல் அதிகாரியிடம் ஒப்படைத்தனர்.

🌺அதிகாரி, அவர்களை அழைத்துச் சென்று துளசிதாசரிடம் ஒப்படைத்தார். துளசிதாசரைப் பார்த்ததும் கள்வர்கள், ’சுவாமி... நாங்கள் செய்தது தவறு தான்; எங்களை மன்னித்து விடுங்கள்...’ என வேண்டினர்.

🌺உடல் முழுவதும் காயங்களுடன் காணப்பட்ட அவர்களை பார்த்த துளசிதாசர் மனம் பதைக்க, ’உங்களை யார் இப்படி அடித்தது... காண்பியுங்கள்;

🌺அவர்களுக்கு தண்டனை அளிக்கிறேன்...’ என்று சொல்லி, மடத்தில் இருந்த காவலர்கள் அனைவரையும் வரிசையாக நிற்க சொன்னார்.

🌺வந்து நின்ற காவலர்களை, கள்வர்கள் நன்றாக பார்த்து, ’சுவாமி... இவர்களில் யாரும் எங்களை அடிக்கவில்லை; வேறு காவலர்கள் தான் அடித்தனர்...’ என்றனர்.

🌺துளசிதாசரோ, ’இங்குள்ளவர்கள் தான் காவலர்கள்; வேறு யாரும் காவலர்கள் கிடையாதே... ஸ்ரீராமா... இது என்ன சோதனை...’ என்று திகைத்தார்.

🌺அப்போது, ராம - லட்சுமணர் துளசிதாசருக்கு காட்சி அளித்து, ’பக்தா... இக்கள்வர்களை அடித்தது நாங்கள் தான்; நீ தண்டிக்க வேண்டுமானால், எங்களை தண்டி...’ என்றனர்.

🌺தான் வணங்கும் தெய்வங்களை நேருக்கு நேராக தரிசித்த துளசிதாசர், உண்மை உணர்ந்து, ’தெய்வமே... என் பொருட்களை காவல் காக்கும் காவல்காரனாக உங்களை ஆக்கி விட்டேனே...’ என்று புலம்பி, ராம, லட்சுமணர் திருவடிகளில் விழுந்து அழுதார். 

🌺'பக்தா துளசி... பொருட்களை சேர்த்து வைக்காதே; அன்னதானம் செய்...’ என்று சொல்லி, மறைந்தனர். துளசிதாசர் மட்டுமல்லாது, கள்வர்களும் திகைத்தனர்.

🌹பின், அத்துடன் அவர்கள் களவுத்தொழிலை கை விட்டு, நல்வழிக்கு திரும்பினர். பக்தனை மட்டுமல்லாது, அவன் உடைமைகளையும் சேர்த்தே காப்பாற்றுவார் இறைவன்.

🌺அத்துடன், அந்தப் பக்தனின் உளத் தூய்மையை, வெளிச்சம் போட்டு காட்டி, பக்தனை உயர்த்துவார் ஸ்ரீ ராமர்!🌹
--------------------------------------------------------------------------
🏵️🌹 *சர்வம் ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம்* 🏵️🌹🏵️

No comments:

Post a Comment