T3-TRAIN THE TRAINER, TRAINING AND RECRUITMENT: Lesson-6, பாடம்-6 பிராணாயாமம்.. சுவாச விழிப்புணர்வு

Thursday, August 24, 2023

Lesson-6, பாடம்-6 பிராணாயாமம்.. சுவாச விழிப்புணர்வு

 ✅📚📚📚📚📚📚📚📚📚📚✅

*💐Meditation தியானம்💐

*📚👃Lesson-6, பாடம்-6👃📚*

*📚பிராணாயாமம்.. சுவாச விழிப்புணர்வு📚


*📚சுவாசத்தை பற்றிய தெளிவு வேண்டும்📚*

*👃மூச்சின் பல சூட்சுமங்களில்.. சில அனுபவங்கள் இங்கே..!*👃📚

*நம் வாழ்வில் நம்மையறியாமலேயே நாம் செய்யும் ஒரு முக்கியமான விஷயம் 👃சுவாசம். பிராணாயாமம்👃 என்பதை பற்றி*
*💫ஜெகத்ஜோதி சுவாமி சிவானந்த பரமஹம்சர் அருளுரை💥👇

*தன்னில் இருக்கின்ற ஜீவசக்தி பிரம்மரந்திரத்தைத்  திறக்காமல் , அத்துடன் சென்று முட்டி , அதோகதியாக வெளியில் போய் நசித்துப் போகின்றதால் தான் செத்துப் போகின்றது.* 

*அதனால் தன்னுடைய ஜீவசக்தியை வெளியில் விடாமல் தன்னுள்ளிலேயே மேல் கதியாக நடத்தி , அந்த ஜீவனால் பிரம்மரந்திரத்தைத் தட்டித் திறக்க வேண்டும்.* 

*அவ்விதம் செய்து ஜீவன் பிரம்மரந்திரத்தில் லயித்து தானாகி தன்மயமாகித் தீருகின்றதே  "மோக்ஷம்" .* 

*அப்பொழுது ஜீவன் ஈஸ்வரனோடு  ஐக்கியமாயிற்று.* 

*இதற்கே " ஜீவேஸ்வர ஐக்கியம் " என்று சொல்லப் படுகிறது.* 

*ஜீவன் ஈஸ்வரனோடு ஐக்கியமானால் என்னவாகும் ?           மோக்ஷமாகும்.* 

*இதற்குத் தான்  பிராணா அபானன் மார்களை ஐக்கியப் படுத்துவதென்று சொல்வது.* 

*பிராணன் நம்முடைய உள்ளில் இருப்பது.*

*அபானன் வெளியில் போவது.* 

*அப்படி வெளியில் போகின்ற அபானனை , வெளியில் போக விடாமல் பிராணனுடன் சேர்த்து உள்ளிலேயே ஒரே கதியாய் நடத்துவதற்குத் தான்  " பிராணாயாமம் " என்று சொல்வது.*  

*பிராணாயாமம் என்றால் பிராணனை ஆயாமம் செய்கிறது.* 

*ஆயாமம் செய்கிறது என்றால் தடுத்து நிறுத்துகின்றது அல்லது நேரே கொண்டு போகின்றது அல்லது நீட்டுகின்றது.*  

*அதாவது உள்ளில் இருக்கின்ற பிராணனை  அபானனாய் வெளியில் போகாமல் உள்ளிலேயே தடுத்து நிறுத்துகின்றது.* 

*அப்பொழுது பிராணனுக்கு நேர் கதியாகின்றது.* 

*இப்பொழுதோ பிராணன் நேரே போகாமல் வளைந்து ஐந்து துவாரங்களின் வழியாக வெளியில் போய் நசித்துக் கொண்டிருகின்றது* 
*அப்படி வெளியில் போகாமல் தன்னுள்ளில் அடங்கி மேல் கீழ் ஒரே கதியாய் வரும் பொழுது நேரே ஆகின்றது.* 

*அதற்காகவே  பிராணனை நேரே கொண்டு போக வேண்டுமென்று சொல்லுவது.* 

*" நீட்டுக " என்றால் நீளமாக்குக  என்றாகின்றது.* 

*எதை நீளமாக்க வேண்டிய தென்றால்  நம் உள்ளில் இருக்கின்ற பிராணன் நீளமாக இல்லாமல்  வளைந்து அபானனாய் வெளியில் போய் நசித்துக் கொண்டிருக்கின்ற அதனையாகும்.* 

*அந்த அபானனை வெளியில் விடாமல் பிராணனுடன் சேர்த்து  மேலே  கொண்டு போகும் பொழுது நீளமாகின்றது.*  

*இதற்காகும்                      " நீட்டமாக்குக " என்று சொல்வது.* 

*அப்பொழுது  நாம் தூங்குகிற சமயத்தில் நம்முடைய கதி எவ்விதமோ அவ்விதமே தூங்காதிருக்கின்ற சமயத்திலும் ஆகித்தீரும்.*  

*வாழ்க வையகம்.  வாழ்க வளமுடன்.*

*❌சுவாசம் பற்றி உணர்ந்த நாம், அதை சரியாக பின்பற்றுவதில்லை.❌*

*அனைவரிடத்திலும் ஆத்ம சக்தி  ஓங்கி ஒளிரட்டும் !*
*வாழ்க வையகம். வாழ்க வளமுடன்.*

*பயிற்சி உதவி:- கோகி, ரேடியோ மார்க்கோனி, புது தில்லி.*

*மீண்டும் அடுத்த பயிற்சி வகுப்பில் சந்திக்கலாம்... நன்றி🙏👍*
👇👇👇👇👇👇👇👇👇👇👇👇

No comments:

Post a Comment