T3-TRAIN THE TRAINER, TRAINING AND RECRUITMENT: நிம்மதி எங்கே இருக்கிறது..

Thursday, August 24, 2023

நிம்மதி எங்கே இருக்கிறது..

 📚🧘‍♂️🧘‍♀️🧘‍♂️🧘‍♀️🧘‍♂️🧘‍♀️🧘‍♂️🧘‍♀️🧘‍♂️🧘‍♀️📚


*🧘‍♀️நிம்மதி எங்கே இருக்கிறது...🧘‍♂️*

*பெரியவர் சொன்ன ரகசியம்...*

*ஒரு மனிதன்....*

*எந்தக் குறையும் இல்லை அவனுக்கு...*

*ஆனாலும் மனசில் நிம்மதி இல்லை.*

*படுத்தால் தூக்கம் வரவில்லை...* 

*சிரமப்பட்டான்...*

*அவன் மனைவி பரிதாபப்பட்டு ஒரு யோசனை சொன்னாள்.*

*பக்கத்துலே உள்ள காட்டுலே ஒர் ஆசிரமம் இருக்கு...*

*அங்கே ஒரு பெரியவர் இருக்கார்...*

*போய்ப் பாருங்கள்!"*

*ஆசிரமத்துக்குப் போனான்...*

*பெரியவரைப் பார்த்தான்.*

*ஐயா....*

*மனசுலே நிம்மதி இல்லே...*

*படுத்தா தூங்க முடியலே!"*

*அவர் நிமிர்ந்து பார்த்தார்...*

*தம்பி...* 

*உன் நிலைமை எனக்குப் புரியுது...*

*இப்படி வந்து உட்கார்!"*

*பிறகு அவர் சொன்னார்:*

*உன் மனசுக்குச் சில ரகசியங்கள் தெரியக்கூடாது...*

*தெரிந்தா உன் நிம்மதி போயிடும்!*

*அது எப்படிங்க?*

*சொல்றேன்...* 

*அது மட்டுமல்ல...*

*மனம் தேவையில்லாத சமயங்களிலே, தேவையில்லாத சுமைகளைச் சுமக்கறதும் இன்னொரு காரணம்!*

*ஐயா  நீங்க சொல்றது எனக்கு புரியலே!*

*புரியவைக்கிறேன்....*

*அதற்கு முன் ஆசரமத்தில் விருந்து சாப்பிடு.*

*வயிறு நிறையச் சாப்பிட்டான்.*

*பெரியவர் அவனுக்கு சுகமான படுக்கையைக் காட்டி, இதில் படுத்துக்கொள் என்றார்.*

*படுத்துக் கொண்டான்...*

*பெரியவர் பக்கத்தில் உட்கார்ந்து கதை சொல்ல ஆரம்பித்தார்...*

*கதை இதுதான்:*

*ரயில் புறப்படப் போகிறது...*

*அவசர அவசரமாக ஒருவன் ஓடி வந்து ஏறுகிறான் அவன் தலையில் ஒரு மூட்டை...*

*ஒர் இடம் பிடித்து உட்கார்ந்தான்.*

*ரயில் புறப்பட்டது...*

*தலையில் சுமந்த வந்த மூட்டையை மட்டும் அவன் கிழே இறக்கி வைக்கவில்லை...*

*எதிரே இருந்தவர் கேட்கிறார்:*

*"ஏம்ப்பா! எதுக்கு அந்த மூட்டையைச் சுமந்துக்கிட்டு வாறே?*

*இறக்கி வையேன்.*

*அவன் சொல்கிறான்:*

*"வேணாங்க!*

*ரயில் என்னை மட்டும் சுமந்தா போதும்!*

*என் சுமையை நான் சுமந்துக்குவேன்!'*

*பெரியவர் கதையை முடித்தார்.*

*படுத்திருந்த நம்ம ஆசாமி சிரித்தான்.*

*ஏன் சிரிக்கிறே?*

*பைத்தியக்காரனா இருக்கானே...*

*ரயிலைவிட்டு இறங்கும் போது, மூட்டையைத் தூக்கிட்டு இறங்கினா போதாதா?*

*அது அவனுக்கு தெரிய வில்லையே*

*யார் அவன்? இயல்பாக கேட்டான்*

*நீதான்!"*

*என்ன சொல்றீங்க?*

*பெரியவர் சொன்னார்:*

*வாழ்க்கை என்பதும் ஒரு ரயில் பயணம் மாதிரிதான்...*

*பயணம் பூராவும் சுமந்து கொண்டே போகிறவர்கள் நிம்மதியாக வாழமுடியாது.*

*தேவைப்படுகிறது மட்டும் மனசில் வைத்துக்கொள்!*

*அவனுக்கு தனது குறை மெல்ல புரிய ஆரம்பித்தது... சுகமாக தூக்கம் வந்தது.*

*தூங்க ஆரம்பித்து விட்டான்...* 

*கண் விழித்த போது எதிரே பெரியவர் நின்று கொண்டிருந்தார்.*

*"எழுந்திரு" என்றார் எழுந்தான்!*

*"அந்த தலையணையைத் தூக்கு!" என்றார்.*

*தூக்கினான்...*

*அடுத்த கணம்"ஆ"வென்று அலறினான்.*

*தலையணையின் அடியில் ஒரு நாகப்பாம்பு, சுருண்டு படுத்திருந்தது*

*ஐயா! என்ன இது?*

*உன் தலைக்கு வெகு அருகில் ஒரு பாம்பு...*

*அப்படி இருந்தும்  நீ நிம்மதியாய் தூங்கி இருக்கிறாய்...!*

*அது ...*

*அது எனக்குத் தெரியாது...*

*பாம்பு பக்கத்தில் இருந்த ரகசியம் உன் மனசுக்குத் தெரியாது...* 

*அதனால் நிம்மதியாகத் தூங்கியிருக்கிறாய்!*

*அவன் புறப்பட்டான்,, நன்றி பெரியவரே...  நான் போய் வருகிறேன்!*

*நிம்மதி எங்கே இருக்கிறது என்பதை புரிந்து கொண்டாயா?*

*புரிந்து கொண்டேன்!*

*என் மனசுக்குள்ளேயே ஒளிந்து கொண்டிருக்கிறது.*

*அறிவின் வெளிச்சத்தால் அதைக் தேடிக் கண்டு பிடித்த விட்டேன் ஐயா.*
📚🧘‍♀️🧘‍♂️🧘‍♀️🧘‍♂️🧘‍♀️🧘‍♂️🧘‍♀️🧘‍♂️🧘‍♀️🧘‍♂️

No comments:

Post a Comment