T3-TRAIN THE TRAINER, TRAINING AND RECRUITMENT: துன்பம் வரும்போது மட்டும் கடவுள் ஞாபகம்..

Thursday, August 24, 2023

துன்பம் வரும்போது மட்டும் கடவுள் ஞாபகம்..

  🧘‍♀️🧘‍♂️🧘‍♀️🧘‍♂️🧘‍♀️🧘‍♂️🧘‍♀️🧘♂️🧘‍♀️🧘‍♂️🧘‍♀️

*📚..துன்பம் வரும்போது மட்டும் கடவுள் ஞாபகம்..*📚



*ஒரு கட்டுமான எஞ்சினியர்… 13 வது…  மாடியிலே வேலை செய்து கொண்டு இருந்தார்…*

*ஒரு முக்கியமான வேலை…*

*கீழே தரைப்பகுதியில் வேலை செய்து கொண்டு இருந்த கொத்தனாருக்கு ஒரு  முக்கியமான செய்தி சொல்ல வேண்டும்…*

*செல் போனில் கொத்தனாரை கூப்பிட்டார் எஞ்சினியர்..*

*ம்ஹும்..கொத்தனார் வேலை மும்முரத்தில், சித்தாளுடன் பேசிக் கொண்ட இருந்தார்…* 

*போனை எடுக்கவில்லை..*

*என்ஜினியரும் உரக்க கத்திப் பார்த்தார்..*

*அப்பொழுதும்.. கொத்தனார்.. மேலே பார்க்கவில்லை…*
 *இவ்வளவுக்கும் ..கொத்தனார் வேலை செய்யும் இடத்தில் இருந்து , அவரால் என்ஜினியரை நன்றாகப் பார்க்க முடியும்…*

*எஞ்சினியர் என்ன செய்வதென்று  யோசித்தார்…*

*ஒரு பத்து ரூபாய் நோட்டை எடுத்து,  மேலே இருந்து, கொத்தனார் அருகில் போட்டார்…*

*ரூபாயைப் பார்த்த கொத்தனார், அதை எடுத்து பையில் போட்டுக் கொண்டார்…*

 *ஆனால் சற்றும் மேல் நோக்கிப் பார்க்கவில்லை…*

*என்ஜினியருக்கு ஒரே கோபம்..*

*இருந்தாலும் பொறுத்துக் கொண்டு…*

*ஒரு ஐநூறு ரூபாயை கொத்தனார் மேல் போட்டார்…*

 *அதையும் எடுத்து சட்டைப் பையில் வைத்துக் கொண்டு… கொத்தனார் மும்முரமாக இருந்தார்…*
.
*எஞ்சினியர்.. பொறுமை இழந்து ஒரு சின்ன கல்லை எடுத்து, கொத்தனார் மீது போட்டார்…*

*அது அவரது தோள் மீது பட்டு நல்ல வலியோடு,  மேலே பார்த்தார்…*

*அப்பொழுதுதான் எஞ்சினியர் தன்னை அழைத்தார் என்பதை உணர்ந்தார்..*

*மனிதனும் அப்படித்தான்….*

*மேலே இருந்து இறைவன் அவனை அழைப்பது அவனுக்கு புரிவதில்லை… உலக மாயைகளில், சிக்கித் தவிக்கின்றான்...*

*இறைவன் அவனுக்கு அருட்கொடைகளை அளிக்கின்றான்...*

*அப்பொழுதும் அவன் இறைவனை ஏறிட்டுப் பார்ப்பதில்லை...*

*ஆனால் ஒரு துன்பம் நேரும் பொழுதுதான் இறைவனை ஏறிட்டுப் பார்க்கின்றான்.*

*🧘‍♂️புரிந்து கொள்ளுங்கள்..🧘‍♀️*

*🧘‍♀️கிடைத்ததற்கு நன்றி பாராட்டுங்கள்..✅*
*🧘‍♂️கிடைக்கவேண்டும் என்று பிரார்த்தனையும் செய்யுங்கள்..🙏*
நன்றி.. கோகி
🧘‍♀️🧘‍♂️🧘‍♀️🧘‍♂️🧘‍♀️🧘‍♂️🧘‍♀️🧘♂️🧘‍♀️🧘‍♂️🧘‍♀️

No comments:

Post a Comment