T3-TRAIN THE TRAINER, TRAINING AND RECRUITMENT: நாம் சொன்னதை எல்லாம் மனம் கேட்டு நடக்கின்றதே என்று விட்டு விடக் கூடாது..!

Thursday, August 24, 2023

நாம் சொன்னதை எல்லாம் மனம் கேட்டு நடக்கின்றதே என்று விட்டு விடக் கூடாது..!

 🐒🐒🐒🐒🐒🐒🐒🧘‍♂️📚

*🌷 ஒரு சாமியாரின் ஆசிரமத்துக்கு அவர் நண்பர் ஒருவர் வந்தார்...!*

*🌷 அவருக்கு உணவு கொடுக்க விரும்பிய "சாமியார்", தான் வளர்த்த குரங்கைப் பார்த்து இலை போடு என்றார்...*

*🌷 குரங்கு வாழை இலை எடுத்து வந்து போட்டது...*

*🌷 உடனே சாமியார் தன் கையில் வைத்திருந்த பிரம்பால் குரங்கின் தலையில் ஓங்கி அடித்து சாதம் போடு என்றார்...!*

*🌷 குரங்கு சாதம் கொண்டு வந்து பரிமாறியது...*

*🌷 திரும்பவும் தலையில் அடித்தார்...! அவர் சொன்னதை எல்லாம் குரங்கு சரியாகச் செய்தாலும் அடி விழுந்து கொண்டே இருந்தது...*

*🌷 நண்பருக்கு மனம் பொறுக்கவில்லை... சாமி குரங்கு தான் நீங்கள் சொன்னதை எல்லாம் சரியாகச் செய்கின்றதே...?*

*🌷 அந்த வாயில்லாச் ஜீவனை ஏன் அடித்துத் துன்புறுத்துகிறீர்கள் என்று கேட்டார்...!*

*🌷 சாமியார் எதுவும் பேசவில்லை... சிரித்து விட்டுப் பிரம்பை தானிருந்தபாயின் கீழே ஒளித்து வைத்தார்...*

*🌷 சற்று நேரத்தில் குரங்கு தாவிப் பாய்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தவரின் தோளில் ஏறி இருந்தது... காதைப் பிடித்து இழுத்தது... தலை மயிரைப் பிரித்துப் பேன் பார்த்தது... சாப்பிட்ட இலையில் வாலைத் தொங்க விட்டு ஆட்டியது...*

*🌷 உடனே சாமியார் நண்பர், ஐயோ சாமி இந்தக் குரங்கின் தொல்லை தாங்க முடியவில்லை அடி போடுங்கள் என்றார் நண்பர்...!*

*🌷 உடனே சாமியார் பிரம்பை எடுத்துக் குரங்கின் தலையில் அடித்தார்... அது போய் ஒரு மூலையில் அமைதியாக இருந்தது...*

*🌷 உடனே  சாமியார் சொன்னார்... இந்தக் குரங்கைப் போலத் தான் மனித மனங்களும்...*

*🌷 நாம் சொன்னதை எல்லாம் மனம் கேட்டு நடக்கின்றதே என்று விட்டு விடக் கூடாது..!*

*ஜபம், பூஜை, தியானம், தவ யோக விரதங்கள் அல்லது சாதனம் என்னும் பிரம்புகளால் தொடர்ந்து தூண்டிக் கொண்டே இருக்க வேண்டும்..*

*🌷 சற்று ஓய்வு கொடுத்தாலும் மனிதனின் மனம் வீணான பலவற்றில் தாவத் தொடங்கி விடும் என்றார்...!*
📚🧘‍♂️🐒🐒🐒🐒🐒🐒🐒🧘‍♀️📚

No comments:

Post a Comment