T3-TRAIN THE TRAINER, TRAINING AND RECRUITMENT: ஆன்ம கடன்

Thursday, August 24, 2023

ஆன்ம கடன்

  📚🧘‍♂️🧘‍♀️🧘‍♂️🧘‍♀️🧘‍♂️🧘‍♀️🧘‍♂️🧘‍♀️🧘‍♂️🧘‍♀️📚


*🧘‍♂️ஆன்ம கடன்🧘‍♀️*

*ஒரு யுத்தத்தில் எதிரி நாட்டு இளவரசனை உயிரோடு பிடித்து இராஜாவின் முன்பு நிறுத்தினர்.* 

*இளவரசன் தன் உயிருக்காகக் கெஞ்சி மன்றாடி தன்னை மன்னிக்கும்படியாக கேட்டுக்கொண்டான்.*

*அதற்க்கு ஒரு நிபந்தனை இருக்கிறது என்றார் வெற்றி பெற்ற ராஜா .*

*விளிம்புவரை தண்ணீர் நிரப்பப்பட்ட பாத்திரம் ஒன்று உனது கையில் தரப்படும்.*

*அது முக்கிய சாலை ஒன்றின் வழியாக ஒரு சொட்டு தண்ணீர் கூட கீழே சிந்தாமல் குறிப்பிட்ட நேரத்துக்குள் ஒரு மையில் தூரம் கொண்டு செல்ல வேண்டும்.*

*கூடவே உருவிய பட்டையத்தோடுஎனது வீரர்கள் வந்துக்கொண்டு இருப்பார்கள்.* 

*ஒருதுளி தண்ணீர் கீழே கொட்டினாலும் கூட அவர்களின் வாள் உன் தலையைச் சீவிவிடும்.*

*வெற்றியோடு முடித்துவிட்டால் விடுதலை"*

*என்று பேரரசர் தனது நிபந்தனையை விதித்தார்.*

*குறிப்பிட்ட நேரம் வந்தது.* 

*இலட்சக்கணக்கான மக்கள் அந்த சாலையின் இரு பகுதிகளிலும் குழுமியிருந்தனர்.* 

*போர் வீரர்கள்  சாலையை ஒழுங்கு செய்து கொடுத்தனர்.* 

*பேரரசர்  முன்னிலையில் முழுவதும் தண்ணீர் நிரப்பிய பாத்திரம் இளவரசனின்  கைகளில் கொடுக்கப்பட்டது.*

*ஒரு பகுதியில் இருந்த மக்கள் இளவரசனை ஊக்குவித்து  உற்ச்சாகப் படுத்தினர்.* 

*மறுபக்கத்தில் இருந்தவர்களோ கேலியும் பரிகாசமும் செய்து கூச்சலிட்டனர்.*

*இளவரசனின் இருபுறமும் வீரர்கள் உருவிய வாளோடு தண்ணீர் சிந்துமானால் வெட்டும்படி கவனித்துக்கொண்டிருந்தனர்.* 

*பாத்திரத்தை உறுதியாய் பிடித்துக்கொண்டான் இளவரசன் நடக்க  சுற்றுப்புறத்திலிருந்து கூச்சலும், பரிகாசமும், ஆர்ப்பாட்டங்களும் கேட்டுக்கொண்டே இருந்தது.*

*எனினும் எதையும் பொருட்படுத்தாதபடி தண்ணீரிலே முழு கவனமும் வைத்து ஓட்டத்தை* *வெற்றியோடு* *ஓடி முடித்தான் இளவரசன்.*

*இளவரசனை பாராட்டிய பேரரசர்,*

*"இளவரசனே உன்னை கேலி செய்தவர்களுக்கு நீ தண்டனை வழங்கலாம்.* 

*உன்னை உற்ச்சாக படுத்தியவர்களுக்கு நன்றி சொல்லலாம்.*

*அவர்களை கவனித்து வைத்திருக்கிறாயா?" என்று கேட்டார்.*

*"என்னை போற்றுபவர்களை நான் கவனிக்கவில்லை,*

*தூற்றுபவர்களையும் நான் பார்க்கவில்லை.*

*எனது கவனமெல்லாம் தண்ணீரில்  அல்லவா இருந்தது."*

*விடுதலையோடு  கூட அரசர் ஒரு ஆலோசனை தந்தார்.*

"இளவரசனே!
*பாத்திரத்தில் உள்ள தண்ணீர் தான் உன் சரீரத்தில் உள்ள 'ஆன்மா'*

*வாழும்  நாட்களிலே  உன் ஆத்மாவில் கண்ணும்  கருத்துமாக இருந்து கடைசியில்  அதை 'சிருஷ்டிகர்த்தாவிடம்'* 
*ஒப்படைக்க வேண்டும்*. 

🏼
*போற்றுவோரைக் கண்டு பெருமை கொள்ளாதே*

🏼
*தூற்றுவோரைக்கண்டு சோர்ந்துப் போகாதே.*

*ஆத்மாவில் கவனம் வை*" என்றார் பேரரசர். 

*எல்லாம் வல்ல இறைவனின் அருளை பெற, இயற்கையோடு இணைவோம்..👍👌*
📚🧘‍♀️🧘‍♂️🧘‍♀️🧘‍♂️🧘‍♀️🧘‍♂️🧘‍♀️🧘‍♂️🧘‍♀️🧘‍♂️📚

No comments:

Post a Comment