T3-TRAIN THE TRAINER, TRAINING AND RECRUITMENT: *சிவா சிவா* *"வாசி, வாசி"*

Thursday, August 24, 2023

*சிவா சிவா* *"வாசி, வாசி"*

 *சிவா சிவா* என்று இடைவிடாமல் தொடர்ச்சியாக சொல்லிப் பாருங்கள்.... *"வாசி, வாசி"* என்று வரும்.... *"வாசி வாசி"* என்று சொல்லுங்கள்.... *"சிவா, சிவா"* என்று வரும்.... *வாசி* என்றால் *சுவாசம்*...


இடது காலைத் தூக்கி ஆடும் சிவனின் கோலத்தை நாம் அனைவரும் பார்த்திருப்போம்.... ஏன் இடது காலைத் தூக்க வேண்டும் என தோன்றியதுண்டா? 

*கால்* என்றால் *காற்று* என்றும் ஒரு பொருள் உண்டு.... காற்றுக்கும் இடது பக்கத்திற்கும் தொடர்பு உண்டா? உண்டு....மனிதனுக்கு மூக்கு ஒன்று என்றாலும் அதில் இரண்டு நாசித் துவாரங்கள் உள்ளன.... வலது நாசித்துவாரம் வழியாகவும், இடது நாசித் துவாரம் வழியாகவும் மூச்சுக் காற்று சென்று வந்து கொண்டிருக்கும்..... *வலது பக்கம்* செல்லும் சுவாசத்திற்கு *சூரிய கலை* என்றும், *இடது பக்கம்* செல்லும் சுவாசத்திற்கு *சந்திர கலை* என்றும் பெயர்..... கலை என்றால் சுவாசத்தின் பகுதி என்று பொருள்.... *கலை என்பதை நாடி* என்றும் கூறலாம்.....

*சூரியன் என்றாலே உஷ்ணம்* *சந்திரன்* *என்றாலே குளிர்ச்சி*.... மனித உடலுக்குத் தேவையான *உஷ்ணத்தை சூரிய கலையும், தேவையான குளிர்ச்சியை சந்திர கலையும் தருகின்றன*...... 
உள்ளத்தின் அளவில் மனிதன் நல்ல காரியங்களைச் செய்யும்போது, அவன் *குளிர்ந்த மனம்* உடையவனாகக் கருதப்படுகிறான்..... கருணை இல்லாதவனை *கல்நெஞ்சச்காரன்* என்று குறிப்பிடுவர்.... *மனம் குளிர்ந்தால்தான் கருணை பொழியும்*.... மனிதனின் ஜீவாதரமான *இதயம் இடப்பக்கம் இருக்கிறது*.... அந்த இதயத்தில் எப்போதும் *கருணை சுரந்து கொண்டிருக்க வேண்டும்* என்பதைக் குறிப்பதற்காகவே *சிவன் இடது காலை தூக்கி ஆடிக் கொண்டிருக்கிறார்*.... (இடதுகால் - இடப்பக்கம் ஓடும் மூச்சு.) 

*சிவனையும், நாம் விடும் மூச்சையும் தொடர்புபடுத்துவது எதனால்?* 

*கால்* என்றால் *காற்று*... காற்றின் மற்றொரு பொருள் *‘வாசி’*.... வாசி என்றால் *'படித்தல்*'.... பாடத்தை வாசிப்பது போல் *மனிதன் தன் மூச்சு வரும் வழியை வாசிக்க வேண்டும்*.... *வாசித்தால் வாழ்வு வளம் பெறுவோம்.... மனிதனின் ஆயுள் நீடிக்கும்*.... 

*ஓம் நமசிவாய*🙏🙏🙏

No comments:

Post a Comment